ரஜினியை போட்டு தாக்கும் கஸ்தூரி..! காரணத்தை விலாவாரியா ட்வீட் செய்தத பாருங்க...

By thenmozhi gFirst Published Sep 7, 2018, 12:30 PM IST
Highlights

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை- தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசை பயணம் செய்த போது சோபியா என்ற மாணவி பாசிச பாஜக அரசு ஒழிக என்று கோஷமிட்டார். இதையடுத்து தமிழிசையின் புகாரின்பேரில் சோபியா கைது செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை- தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசை பயணம் செய்த போது சோபியா என்ற மாணவி பாசிச பாஜக அரசு ஒழிக என்று கோஷமிட்டார். இதையடுத்து தமிழிசையின் புகாரின்பேரில் சோபியா கைது செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும் மாணவர் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் தமிழகத்தில் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி ரமணா ஆகியோர் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தியது. 

இதையடுத்து தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

 

ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்?

தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான். pic.twitter.com/YZooptu8Wh

— Kasturi Shankar (@KasthuriShankar)

விரைவில் கட்சியை தொடங்கும் ரஜினிகாந்த் இப்படி பட்டும் படாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்? தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான் என்று தனது  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்

click me!