
இப்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நாயகியாக வலம் வரும் சனம் செட்டி அவர்கள் துவக்கத்தில் மாடல் அழகியாக தனது பயணத்தை துவங்கினார். கடந்த 2016 ஆம் ஆண்டு "மிஸ் சவுத் இந்தியா" பட்டத்தை வென்றதும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் பிறந்த சனம் செட்டி தமிழ் திரை உலகின் மூலம் தான் கலை உலகில் அறிமுகமானார்.
தொடர்ச்சியாக பல நல்ல திரைப்படங்களில் அவர் நடித்த வருகிறார் இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "மகா" திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் இவர் போட்டியாளராக பங்கேற்று 63வது நாளில் எவிக்ட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டீப் பேக் வீடியோ குறித்து ஒரு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு இருக்கிறார் சனம் செட்டி. சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகை ராஸ்மிகா மந்தானாவில் வீடியோ ஒன்று மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது. அதன் பிறகு அந்த Deep Fake வீடியோவை உருவாக்கியவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டார்.
இதேபோல பல நடிகைகளுக்கு இதுபோன்ற வீடியோக்கள் வெளியானதும் அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தற்பொழுது வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் "ஒரு தனி நபர், ட்விட்டர் மூலம் தனது Deep Fake வீடியோவை வெளியாடப்போவதாக மிரட்டுவதாக பதிவிட்டுள்ளார். மேலும் தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.