கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு உதவிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

Published : Mar 30, 2020, 10:10 AM IST
கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு  உதவிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

சுருக்கம்

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் உரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நலிந்த கலைஞர்களுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் வசதி படைத்த நடிகர் - நடிகைகள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு, பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வ மணி தரப்பில் இருந்தும், நடிகர் சங்க தனி அதிகாரி தரப்பில் இருந்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் உரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நலிந்த கலைஞர்களுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் வசதி படைத்த நடிகர் - நடிகைகள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு, பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வ மணி தரப்பில் இருந்தும், நடிகர் சங்க தனி அதிகாரி தரப்பில் இருந்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெள்ளித்திரை பிரபலங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவியை பணமாகவும், அரிசி மூட்டைகளாகவும் நலிந்த கலைஞர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் உதவியுள்ள நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ரூ.1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னால் முடிந்த சிறு உதவியை செய்துள்ளேன், வேலையில்லாமல் இருக்கும் அவர்களுக்கு தொடர்ந்து பலர் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!