
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் உணர்வு கொண்ட அனைத்து இளைஞர்களும் நேற்று காலை முதல் சென்னை மெரீனா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு கோலிவுட் திரையுலகினர் அனைவருமே நேரிலும், சமூக வலைத்தளம் மூலமும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சீயான் விக்ரம் இதுகுறித்து குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார் மேலும் அவர் கூறுகையில் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எனது ஆசை, எண்ணம்.
அதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும் அனைத்து தமிழர்களுக்கும் குறிப்பாக மாணவ, மாணவியருக்கும் எனது நெஞ்சார்ந்த முழு ஆதரவு
இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சிறிதும் எனக்கு சந்தேகமில்லை என்று விக்ரம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.