வீர் சாவர்க்கரை தொட்ட நீ கெட்ட.. நடிகைக்கு வீடு தேடி வந்த கடிதம்.. உயிரை காப்பாற்றச் சொல்லி போலீசில் கதறல்.

By Ezhilarasan BabuFirst Published Jun 30, 2022, 2:02 PM IST
Highlights

தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக கூறி பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக கூறி பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில நடிகைகள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று  இருந்து  நடிப்பு பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பர். அதே நேரத்தில் சில நடிகைகள் சமூகத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு துணிவுடன் குரல் கொடுத்து அதற்கு ஆதரவு எதிர்வினை ஆற்றுவர். அதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் தான் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் தயங்காது தனது கருத்தை கூற கூடியவர், சில நேரங்களில் அவர் கூறும் அதிரடியான கருத்துக்களால் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு.

இதையும் படியுங்கள்:மகாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் தேவேந்திர பட்னவிஸ் புதிய அமைச்சர்கள் பட்டியல்

சமீபத்தில் அவர் தெரிவித்த கருத்து இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, ஒருகட்டத்தில் ஸ்வரா பாஸ்கரை கைது செய்ய வேண்டும் என்ற முழக்கங்களும் சமூக வலைதளங்களில் ஓங்கி ஒலித்தது. அதாவது தலிபான் தீவிரவாதிகளுடன் இந்துத்துவாவை ஒப்பிட்டு பேசியது தான் அது, தீவிரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவில் உள்ளது, அது போலத்தான் இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதமும் சகித்துக் கொள்ள முடியாத அளவில் உள்ளது என அவர் பேசியதே சர்ச்சைக்கு காரணம்.

அவருடைய கருத்துக்கள் எப்போதும் கம்யூனிச  சித்தாந்தத்தை சார்ந்ததாகவும் இந்துத் துவாவுக்கு எதிராகவுமே இருந்து வருகிறது என்பது இந்துத்துவாவாதிகள் குற்றச்சாட்டாக உள்ளது. அவரின் அந்த கருத்துக்கு இந்துத்துவா வாதிகளுடன் இந்தியாவில் வசிக்க சிரமமாக இருந்தால், பாகிஸ்தான், பங்களாதேஷ் போகலாம் என அவரை விமர்சித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்:  முதலிரவு ரூமுக்குள் நுழைந்த உடனே மிருகத்தனமாக பாலியல் தொல்லை.. அலறியபடி மயங்கி விழுந்த மணம்பெண்..!

இதேபோல் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வந்தார் ஸ்வரா பாஸ்கர் ஷாருக்குக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென ஒரு குழுவையும் அவர் ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட பின்னணி கொண்ட ஸ்வர பாஸ்கர் திடீரென மும்பை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. 

ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் வீர் சாவர்க்கரை இழிவுபடுத்துவதை நாட்டில் இளைஞர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது, ஆனால் இந்த கடிதத்தை அனுப்பியது யார் என்ற விவரம் தெரியவில்லை, அடையாளம் தெரியாத நபர்களால் அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை பெற்ற பிறகு ஸ்வரா பாஸ்கர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பை வேர்சோவா காவல் நிலையத்தை அணுகி புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நடிகைக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!