
தமிழ் திரை உலகில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான "சுக்கிரன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களம் இறங்கியவர் தான் விஜய் ஆண்டனி. கடந்த 19 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பல நல்ல திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான "நான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் தமிழ் திரையுலகில் விஜய் ஆண்டனி களமிறங்கினார்.
இவருடைய திரைப்படங்களுக்கு என்று இப்போது வரை ஒரு தனி மவுசு உள்ளது. ஏற்கனவே இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி இவருடைய "ரோமியோ" திரைப்படம் வெளியான நிலையில், "அக்னி சிறகுகள்", "ஹிட்லர்", "காக்கி" மற்றும் "வள்ளி மயில்" உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய நடிப்பில் இவ்வாண்டு இறுதிக்குள் வெளியாக உள்ளது.
பிசியான இயக்குனராகவும், பிஸியான நடிகராகவும், இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வரும் விஜய் ஆண்டனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை தற்பொழுது வெளியேற்றுகிறார். அதில் பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து கொல்லும் திரு. ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கு இந்த கடிதத்தை எழுதுவதாக அவர் கூறியிருக்கிறார்.
"இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம், தியேட்டர்ல போய் பாருங்க. ரோமியோவை அன்பே சிவம் ஆக்காதீங்க" என்று Vijay Antony வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.