இனவெறிக்கு ஆளான நடிகர் மாதவன்...! இவருக்கு இப்படி ஒரு சோதனையா..?

 
Published : Feb 08, 2018, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
இனவெறிக்கு ஆளான நடிகர் மாதவன்...! இவருக்கு இப்படி ஒரு சோதனையா..?

சுருக்கம்

actor mathavan met racism

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய்யாக அறிமுகமான, நடிகர் மாதவன் தற்போது தமிழ், மற்றும் இந்தியில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாக கூறியுள்ளார்.

நடிகர் மாதவன்:

நடிகர் மாதவன் ஆரம்ப காலத்தில் சில விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர். பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'அலைபாயுதே' படத்தில் நடித்தார். இந்த படம் மிகபெரிய வெற்றிப்பெறவே இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. 

தமிழ் மட்டும் இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர். காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சில காலம், நடிப்புக்கு இடைவேளை விட்டிருந்தார். கால் முழுமையாக குணமானதும், இவர் ரீஎன்ட்ரி கொடுத்த திரைப்படம் 'இறுதி சுற்றி' இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. மேலும் கடந்த ஆண்டு வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இனவெறியில் சிக்கிய மாதவன்:

மாதவன் தமிழ் குடும்பத்தில் பிறந்து பீகாரில் வளர்ந்தவர், அதனால், அவரை அங்கு மதராஸி என்று பிரித்து தான் அழைப்பார்களாம். இதனால் இனவெறி அங்கு மாதவனுக்கும் அரங்கேறியது.

20 வயது வரை தன்னை கொஞ்சம் ஒதுக்கிய தான் வைத்ததாகவும், எதற்காக என்னை வேறுப்படுத்தி பார்த்தார்கள் என்பது இன்று வரை தெரியவில்லை என்று மனவேதனையோடு மாதவன் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!