
திருநெல்வேலியில் ரசிகர்களை சந்தித்து தீரன் திரைப்படம் குறித்து சுவாரசியமாக கலந்துரையாடினார் நடிகர் கார்த்தி.
தீரன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் குறித்து படத்தின் கதாநாயகன் கார்த்தி, தனது ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி திருநெல்வேலி திரையரங்கில் நேற்று நடைபெற்றது.
அந்தச் சந்திப்பின்போது கார்த்தி கூறியது:
"தீரன் திரைப்படம் காவல்துறையினரை கௌரவிக்கும் வகையில் எடுக்கப்பட்டது.
காவலர்கள் படும் சிரமங்கள், இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் காவலர்களின் கஷ்டம் ஆகியவற்றை உணர்த்துவதுடன் நேர்மையான காவல்துறை அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது.
இந்தத் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.