டிப்ளமோ படித்திருந்தால் போதும்.. ரூ.20,000 சம்பளத்தில் தேசிய ஊரக நல வாழ்வு மையத்தில் வேலை..

By Ramya sFirst Published Feb 15, 2024, 4:14 PM IST
Highlights

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட நலச்சங்கத்தின் கட்டுப்பாட்டில் தேசிய நலவாழ்வு குழும மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட நலச்சங்கத்தின் கட்டுப்பாட்டில் தேசிய நலவாழ்வு குழும மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்ட நபர்கள் இந்த பணியிடங்களூக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 19.02.2024 கடைசி நாளாகும்.

பணியின் பெயர் : Refrigeration Mechanic
காலியிடம் : 1 
வயது வரம்பு : 45
மாத தொகுப்பூதியம் ரூ.20,000
கல்வித்தகுதி : ஐடிஐ தொடர்புடைய படிப்பில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு பணி முன் அனுபவம் இருக்க வேண்டும்.

இந்திய ரயில்வேயில் 9,000 காலியிடங்கள்.. சம்பளம் எவ்வளவு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பதவியின் பெயர் : Assistant Cum Data Entry Operator 
காலியிட எண்ணிக்கை : 2
வயது வரம்பு : 35 வயது வரை
மாத தொகுப்பூதியம் : ரூ.15,000
தகுதி : கணினி அறிவு கொண்டிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Office Assistant 
காலியிட எண்ணிக்கை : 1
மாத தொகுப்பூதியம் : ரூ.10,000
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

பணியின் பெயர் : Multi purpose workers 
காலியிட எண்ணிக்கை : 13
வயது வரம்பு : 40 வயது வரை
மாத தொகுப்பூதியம் : நாள் ஒன்றுக்கு ரூ.300
தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி

பணியின் பெயர் : Dispenser
வயது வரம்பு : 35 வரை
பணியிட எண்ணிக்கை : 1
மாத தொகுப்பூதியம் நாள் ஒன்றுக்கு ரூ.750 
கல்வித்தகுதி : மருந்தியல் துறையில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 

சொன்னா நம்ப மாட்டீங்க! அண்ணா பல்கலைக்கழகத்தில் 60,000 ரூபாய் சம்பளத்தில் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https// tiruvallur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பதிவு செய்து, உரிய விவரங்களுடன் பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

click me!