எகிறி குதித்த இந்திய பங்குச் சந்தை; உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்; அமெரிக்காவில் நடந்த அதிசயம்!!

Published : Jul 13, 2023, 11:33 AM IST
எகிறி குதித்த இந்திய பங்குச் சந்தை; உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்; அமெரிக்காவில் நடந்த அதிசயம்!!

சுருக்கம்

இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இன்று தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. சென்செக்ஸ் இன்று 612.55 புள்ளிகள் அதிகரித்து 66,008.23 புள்ளிகளை தொட்டுள்ளது. துவக்கத்தில் 500 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்து காணப்பட்டது. அதாவது, துவக்கத்தில் 0.81 சதவீத வளர்ச்சியை பெற்று இருந்தது. அதே நேரம் 50 பங்குகளை கொண்ட நிஃப்டி 150 புள்ளிகள் அதிகரித்து 19,534, புள்ளிகளை தொட்டுள்ளது. அதாவது 0.78 சதவீத வளர்ச்சியை பெற்று இருந்தது.  

பங்குச் சந்தை உயர்வுக்கு அமெரிக்காவின் பணவீக்கம் குறைந்து இருப்பதுதான் காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த ஜூன் மாதம் பணவீக்கம் சுமார் 3% குறைந்து இருக்கிறது. இது சர்வதேச அளவில் பிரதிபலித்து இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.  

டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ், எம்&எம், எஸ்பிஐ மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை சென்செக்ஸில் இன்று லாபம் ஈட்டியுள்ளன. பஜாஜ் ஆட்டோ, ஹிண்டல்கோ மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் ஆகியவை நிஃப்டியில் ஆதாயத்தை ஈட்டியுள்ளன. மறுபுறம், ஹெச்சிஎல் டெக், பவர் கிரிட், நெஸ்லே மற்றும் டாக்டர் ரெட்டிஸ் ஆகியவை பின்னடவை சந்தித்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.6 சதவீதம் வரை உயர்ந்து இருந்தன. ஒட்டு மொத்தமாக அனைத்து வகையிலான சந்தைகளும் இன்று ஏற்றம் கண்டு இருந்தன.

மேலும், ஹெச்சிஎல் டெக் பங்குகள் சரிவில் இருந்தபோதும், ஐடி குறியீட்டு எண் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக ஆரம்ப வர்த்தகத்தில் வர்த்தகத்தில் உயர்ந்து காணப்பட்டது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!
Economy: இனி பெட்ரோல் மட்டுமல்ல, காய்கறி விலையும் உச்சம் போகும்.! இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படப்போகும் தலைகீழ்மாற்றம்.!