Mahindra: இந்தியாவின் பிரபல கோடீஸ்வரர் கேஷுப் மஹிந்திரா 99 வயதில் காலமானார்!!

Published : Apr 12, 2023, 11:58 AM ISTUpdated : Apr 12, 2023, 12:41 PM IST
Mahindra: இந்தியாவின் பிரபல கோடீஸ்வரர் கேஷுப் மஹிந்திரா 99 வயதில் காலமானார்!!

சுருக்கம்

இந்தியாவின் பிரபல கோடீஸ்வரரும், மஹிந்திரா & மஹிந்திராவின் முன்னாள்  தலைவருமான கேஷுப் மஹிந்திரா தனது 99வது வயதில் புதன்கிழமை காலமானார்.

மஹிந்திராவின் நிகர சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலராகும். ஆகஸ்ட் 9, 2012 அன்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் தனது மருமகன் ஆனந்த் மஹிந்திராவிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

இவரது 48 ஆண்டுகால தலைவர் பொறுப்பில், மஹிந்திரா குழுமம் ஒரு ஆட்டோமொபைல் தயாரிப்பில் இருந்து ஐடி, ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், பிற வணிகப் பிரிவுகள் இன்று வளர்ந்துள்ளது. விரிவடைந்தது.

வில்லிஸ் கார்ப்பரேஷன், மிட்சுபிஷி, இன்டர்நேஷனல் ஹார்வெஸ்டர், யுனைடெட் டெக்னாலஜிஸ், பிரிட்டிஷ் டெலிகாம் மற்றும் பல உலக நிறுவனங்களுடன் வணிகக் கூட்டணிகளை உருவாக்கி கேஷுப் மஹிந்திரா சிறந்து விளங்கினார். 

"தொழில்துறை உலகம் இன்று மிக உயரமான ஆளுமைகளில் ஒருவரை இழந்துவிட்டது. ஸ்ரீ கேஷூப் மஹிந்திராவுக்கு இணை இல்லை; நான் தெரிந்துகொள்ளும் பாக்கியம் பெற்ற நல்ல மனிதர். நான் எப்போதும் அவருடனான சந்திப்பை விரும்பினேன். மேலும் அவர் வணிகம், பொருளாதாரம் மற்றும் சமூக விஷயங்களை எவ்வாறு இணைத்தார் என்பது குறித்து வியந்து பார்த்துள்ளேன். ஓம் சாந்தி," என்று பவன் கோயங்கா ட்வீட் செய்துள்ளார்.

வளர்ச்சி 5.9 சதவீதம்... இந்தியா தான் வேகமாக வளரும் நாடு: சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்றவர் கேஷுப் மஹிந்திரா. அவர் 1947 ஆம் ஆண்டில் நிறுவனத்தில் சேர்ந்து, 1963 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் தலைவரானார். 

அவர் செயில், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், டாடா ஹோட்டல்ஸ், ஐஎப்சி, ஐசிஐசிஐ  உட்பட தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் போர்டு உறுப்பினராக பணியாற்றி உள்ளார். ஹட்கோவின் (ஹவுசிங் அண்ட் ஆர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்) முன்னாள் நிறுவனர் தலைவராகவும் கேஷுப் மஹிந்திரா இருந்தார்.  ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

உடனே ராஜினமா.! 12 மாத சம்பளத்தை வாங்குங்க - அமேசான், கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Rupee Value: இந்திய ரூபாய் மதிப்பு சரிய காரணம் இதுதான்.! இதனால் இவ்ளோ பாதிப்பா?!
Business: மாதத்திற்கு ரூ.1 லட்சம் சம்பாதிப்பது இவ்ளோ ஈசியா?! தித்திக்கும் வருமானம் தரும் தேனீ வளர்ப்பு.!