வசூல் ராஜாவான ஜிஎஸ்டி; நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரூ.1.50 லட்சம் கோடி தாண்டியது!!

Published : Feb 01, 2023, 10:59 AM ISTUpdated : Feb 01, 2023, 01:20 PM IST
வசூல் ராஜாவான ஜிஎஸ்டி; நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரூ.1.50 லட்சம் கோடி தாண்டியது!!

சுருக்கம்

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ஜனவரி மாதத்தில் ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டி, நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரூ.1.55 லட்சம் கோடியை எட்டியுள்ளது.  

கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வசூல் ரூ.1.38 லட்சம் கோடியாக இருந்ததால், மாதாந்திர வருவாய் ஆண்டு அடிப்படையில் 12% உயர்ந்துள்ளது. இதற்கிடையில், நடப்பு நிதியாண்டில் ஜனவரி 2023 வரையிலான வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 24% அதிகமாகும்.

ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூலானது, 2022 ஏப்ரல் மாதத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகபெரிய உயர்வாகும்.  கடந்த ஆண்டில் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில், சரக்கு இறக்குமதி மூலம் கிடைக்கும் வருவாய் 29% அதிகமாகவும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாயை விட 22% அதிகமாகவும் உள்ளன. 

Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்கள், முதியவர்களுக்கான புதிய சேமிப்புத் திட்டங்கள்
மொத்த ஜிஎஸ்டி வசூலான ரூ.1.55 லட்சம் கோடியில், சிஜிஎஸ்டி ரூ.28,963 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ரூ.36,730 கோடியாகவும், ஐஜிஎஸ்டி ரூ.79,599 கோடியாகவும், செஸ் ரூ.10,630 கோடியாகவும் (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.768 கோடி உட்பட) உள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்