
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 22 ரூபாயும், சவரனுக்கு 176 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,338ஆகவும், சவரன், ரூ.42,704ஆகவும் இருந்தது.
நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 22 ரூபாய் உயர்ந்து ரூ.5,360ஆகவும், சவரனுக்கு 176 ரூபாய் அதிகரி்த்து ரூ.42 ஆயிரத்து 880 ஆக குறைந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,360க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலையில் நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஷாக் இல்லை! இன்றைய நிலவரம் என்ன?
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது, அமெரி்க்க பெடரல் வங்கியும்வட்டி வீதம் குறித்த அறிவிப்பையும் இன்று வெளியிட உள்ளது. இதன் காரணமாக சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் எச்சரிக்கையுடன் தங்கத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளனர். பட்ஜெட் அறிவிப்பு, பெடரல் ரிசர்வ் அறிவிப்பைப் பொறுத்து தங்கம் விலை மாறுபடும்.
வெள்ளி விலையில் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.74.70 ஆக இருந்தநிலையில் இன்று கிராமுக்கு 30 பைசா உயர்ந்து, ரூ.74.80ஆகவும், கிலோவுக்கு 300 அதிகரித்து ரூ.74,800 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.