பட்ஜெட் என்றால் என்ன? இன்றைய பட்ஜெட் செய்திகளுக்குள் செல்வதற்கு முன்பு இதை நீங்கள் தெரிந்து இருக்க வேண்டும்!!

Published : Feb 01, 2023, 10:17 AM IST
பட்ஜெட் என்றால் என்ன? இன்றைய பட்ஜெட் செய்திகளுக்குள் செல்வதற்கு முன்பு இதை நீங்கள் தெரிந்து இருக்க வேண்டும்!!

சுருக்கம்

சிவப்பு நிற சேலை அணிந்து, கையில் சிவப்பு நிற பர்ஸ் கொண்டு வந்து இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி முர்முவை சந்தித்து நாடாளுமன்றத்துக்கு வருகிறார். இந்த நிலையில் பட்ஜெட் என்றால் என்ன? எதற்காக தாக்கல் செய்யப்படுகிறது என்பதை அனைவரும் அறிந்து இருக்க வேண்டும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று, பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின் 112வது பிரிவின்படி, ஏப்ரல் முதல் செயல்படும் ஒவ்வொரு நிதியாண்டுக்கும் மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் செலவுகளின் அறிக்கையை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும். 

நிதிப்பற்றாக்குறை: நிதியாண்டில் அரசாங்கத்தின் செலவு அதன் கடன் அல்லாத வருமானத்தை விட அதிகமாகும் போது நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. இது அரசாங்கத்திற்கு தேவையான மொத்த கடன் தொகையை குறிக்கிறது.

வருவாய் பற்றாக்குறை: வருவாய் பற்றாக்குறை என்பது அன்றாட நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் செலவினங்களுக்கும் வரிகள் மற்றும் பிற ஆதாரங்களின் மொத்த வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம். இது அரசாங்கத்தின் நிதி ஆரோக்கியத்தின் முக்கியமான அளவாகும். அதன் வருமானம் அதன் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்பதைக் குறிக்கிறது. வருவாய் பற்றாக்குறை ஏற்படும் போது, அந்த வித்தியாசத்தை ஈடுகட்ட அரசாங்கம் கடன் வாங்க வேண்டும்.

வரி வருவாய்: வரி வருவாய் என்பது வருமானம், லாபங்கள் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வு ஆகியவற்றின் மீதான வரிகளிலிருந்து அரசாங்கத்தால் சேகரிக்கப்படும் நிதியின் அளவு. இதில் நேரடி மற்றும் மறைமுக வரிகளும் அடங்கும். வரி வருவாய் அரசாங்க வருமானத்தின் முதன்மை ஆதாரமாகும்.

நேரடி வரி: நேரடி வரி என்பது தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் ஒரு வகை வரி. இதில், வரி செலுத்தும் நபரும், வரி விதிக்கப்பட்ட நபரும் ஒரே மாதிரியானவர்கள். நேரடி வரிகளின் எடுத்துக்காட்டுகளில் வருமான வரி, கார்ப்பரேட் வரி, சொத்து வரி மற்றும் பரம்பரை வரி ஆகியவை அடங்கும்.

Union Budget 2023: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள் யார் யார்?

மறைமுக வரி: மறைமுக வரி என்பது பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் ஒரு வகை வரி. இதில், வரி செலுத்தும் நபரும், வரி விதிக்கப்பட்ட நபரும் வேறுபட்டவர்கள். மறைமுக வரிகளின் எடுத்துக்காட்டுகளில் ஜிஎஸ்டி, சுங்க வரி மற்றும் மத்திய கலால் வரி ஆகியவை அடங்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP): GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்பது அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் பண மதிப்பின் அளவீடு ஆகும். ஓராண்டில் நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து உற்பத்திகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

பணவீக்கம்: பணவீக்கம் என்பது ஒரு பொருளாதாரத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒட்டுமொத்த விலை உயரும் விகிதத்தைக் குறிக்கிறது. பொருட்களின் விலைவாசியைக் குறிக்கும்.

சுங்க வரி: சுங்க வரி என்பது ஒரு நாட்டிற்குள் அல்லது இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் மீது விதிக்கப்படும் ஒரு வகை மறைமுக வரி. இந்த வரி இறுதியில் நுகர்வோர் மீது திணிக்கப்படுகிறது. 

நிதிக் கொள்கை: நிதிக் கொள்கை என்பது பொருளாதார நோக்கங்களை அடைய அரசாங்கம் அதன் செலவு மற்றும் வருவாய் சேகரிப்புகளை (வரிகள் மூலம்) நிர்வகிக்க எடுக்கும் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.

ஒருங்கிணைந்த நிதி: இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியானது, பேரிடர் மேலாண்மை போன்ற விதிவிலக்கான செலவுகளைத் தவிர்த்து, நிதியாண்டில் பெறப்பட்ட வருவாய்கள் மற்றும் செலவினங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியமான அரசுக் கணக்கு ஆகும். விதிவிலக்கு அல்லாத அனைத்து அரசாங்க செலவினங்களும் இந்த நிதியிலிருந்து செய்யப்படுகின்றன.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

UPI-யோடு கிரெடிட் கார்டா..! மெர்சல் காட்டிய கூகுள் பே..! இந்தியர்கள் செம குஷி!!
டிசம்பர் 31 கடைசி தேதி.. இந்த பணிகளை மறக்காதீங்க.. இல்லைனா அபராதம் விதிக்கப்படும்!