வங்கதேசத்தில் நடப்பது என்ன? இந்து கோவில்கள் தாக்குதல்! இந்து பெண்கள் மீது வன்முறை! இடஒதுக்கீடு போராட்டம் தானா?

By Dinesh TGFirst Published Aug 6, 2024, 11:31 AM IST
Highlights

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ராஜினாமா மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகார வெற்றிடத்தால் நாடு ஏற்கனவே தத்தளித்து வரும் நிலையில் இந்து சமூகத்திற்கு எதிராக பயங்கரவாத வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு போராட்டம் வேறுதிசை மாறி சென்றுகொண்டிருக்கிறது.
 

குழப்பத்தில் வங்கசேதம்

அண்டை நாடான வங்கதேசத்தில் அரசுப் பணிகளுக்கான இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு என்று ஆரம்பித்த போராட்டம் கிளர்ச்சியாக மாறிய நிலையில் தற்போது அந்த வன்முறை இந்துக்களுக்கு எதிராக மாறியுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதிகள் அரசியல் கொந்தளிப்பை பயன்படுத்தி இந்து சமூகத்திற்கு எதிராக பயங்கரவாத அலை மற்றும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதால், வங்கதேசம் குழப்பத்தில் மூழ்கியுள்ளது.

இந்துக்கள் மீது தாக்குதல்

வங்கதேசம் நாடு முழுவதிலும் இருந்து இஸ்லாமிய கும்பல் இந்துக்களின் வீடுகளைத் தாக்குவதும், அவற்றைத் தரைமட்டமாக்குவதும், பெண்களைக் கடத்திச் செல்வதும் போன்ற அராஜகச் செயல்களில் ஈடுபடுவதும் போன்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.



இஸ்லாமிய குழுக்கள்

பிரதமர் ஷேக் ஹசீனாவின் ராஜினாமா மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகார வெற்றிடத்தால் நாடு ஏற்கனவே தத்தளித்து வரும் நிலையில் மீண்டும் வன்முறை வெடித்தது. வலுவான தலைமை இல்லாததால் தைரியமடைந்த இஸ்லாமியக் குழுக்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தேசத்தில் நீண்டகாலமாக பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும் இந்து சிறுபான்மையினரை குறிவைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து காணொளிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் எடுத்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைராலகி வருகின்றன.

Latest Videos

 

And the genocide of Hindus by IsIamists in continues...
They're openly burning the Hindu's houses, kiIIing them, abducting women......

Forget condemning, so called seculars are rejoicing it... pic.twitter.com/FcmLDZ5GNa

— Mr Sinha (@MrSinha_)

 

இந்து பெண்கள் கடத்தப்பட்டு அறியப்படாத இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அதே நேரத்தில் அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீவைக்கப்படுகின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தையோ அல்லது மனித உயிரையோ பொருட்படுத்தவில்லை, ஏனெனில் அவர்கள் அப்பாவி பொதுமக்களை கொடுமைபடுத்துகின்றனர்.

Hindu temples are being burnt.
Hindu women are being r@ped.
Hindu men, women & children are being killed.

Hindus in Bangladesh facing burburism of Jamaat-e-Islami.

This is what happens when Hindus become minority. Bangladesh has become Pakistan for Hindus. We can only cry 😢 pic.twitter.com/6qfzDI7Deb

— Baba Banaras™ (@RealBababanaras)

BREAKING:

More and more videos coming out of Bangladesh, showing local Islamists taking advantage of the chaos in the country to attack the homes of the Hindu community in the country

🇧🇩🇮🇳 pic.twitter.com/jiGwd3UXF1

— Visegrád 24 (@visegrad24)

BREAKING:

Islamists attack a Hindu village in Bangladesh.

They surround the homes and threaten the people inside.

At the end of the video, they enter the house and lead the Hindus out, rounding them up and forcing them out of the village

🇧🇩🇮🇳 pic.twitter.com/ZLIOiLZIRJ

— Visegrád 24 (@visegrad24)


சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, சிறுபான்மை இந்துக்களைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. இருப்பினும், வங்கதேச அதிகாரிகள் பதிலளிப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். நிலைமை மேலும் மோசமாகி வருகிறது.

Bangaladesh | வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை! யார் இந்த கலிதாஜியா?


ஆகஸ்ட் 4, ஞாயிற்றுக்கிழமை, வங்காளதேசத்தில் நடந்த வன்முறை மோதல்களில் ஒரு இந்து கவுன்சிலர் உட்பட சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். இஸ்கான் மற்றும் காளி கோவில் போன்ற இந்து இல்லங்கள் மற்றும் கோவில்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்.

 

click me!