மார்பக அயர்னிங் என்றால் என்ன? ஆப்பிரிக்கப் பெண்களை வதைக்கும் பழக்கத்திற்குக் காரணம் என்ன?

Published : Aug 04, 2024, 06:06 PM ISTUpdated : Aug 04, 2024, 06:09 PM IST
மார்பக அயர்னிங் என்றால் என்ன? ஆப்பிரிக்கப் பெண்களை வதைக்கும் பழக்கத்திற்குக் காரணம் என்ன?

சுருக்கம்

பாலியல் துன்புறுத்தல், கட்டாய திருமணம் ஆகியவற்றிலிருந்து இளம் பெண்களைப் பாதுகாக்கவும் ஆண்களைக் கவரும் கவர்ச்சியான தோற்றத்தைத் தவிர்க்கவும் மார்பக அயர்னிங் செய்கிறார்கள். இருப்பினும், இது பெண்களுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மார்பக அயர்னிங் அல்லது மார்பகத்தை தட்டையாக்குதல் என்பது ஒரு இளம் பெண்ணின் வளரும் மார்பகங்களை கடினமான அல்லது சூடான பொருட்களை கொண்டு அழுத்தி மசாஜ் செய்வதாகும். பொதுவாக பெண் உறவினர்கள் இந்த மசாஜை செய்துவிடுகிறார்கள்.

பாலியல் துன்புறுத்தல், கட்டாய திருமணம் ஆகியவற்றிலிருந்து இளம் பெண்களைப் பாதுகாக்கவும் ஆண்களைக் கவரும் கவர்ச்சியான தோற்றத்தைத் தவிர்க்கவும் இப்படிச் செய்கிறார்கள். இருப்பினும், இது பெண்களுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக ஆப்பிரிக்க நாடான கேமரூனில் இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. மார்பக அயர்னிங், மார்பக வளர்ச்சியைத் தாமதப்படுத்துவதன் மூலம் பெண்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பதாக நம்புகிறார்கள். நைஜீரியா, டோகோ, கினியா, கோட் டி ஐவரி, கென்யா மற்றும் ஜிம்பாப்வே போன்ற பிற ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தப் பழக்கம் உள்ளது.

இந்தியா அமெரிக்க சம்பளத்தில் 1/4 பங்கை எட்டவே 75 வருஷம் ஆகும்: உலக வங்கி கணிப்பு

மார்பக அயர்னிங் செய்வதற்கு பொதுவாக சில பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மர பூச்சிகள், இலைகள், வாழைப்பழங்கள், தேங்காய் ஓடுகள், குழவிகள், சூடான சுத்தியல் ஆகியவை அதிகமாக பயன்படுத்தப்படும். பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் தான் மார்பக அயர்னிங் செய்யப்படுகிறது. இது வாரம் அல்லது மாதக் கணக்கில் கூட நீடிக்கும்.

மார்பக அயர்னிங் கடுமையான வலி, திசு சேதம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம், நோய்த்தொற்றுகள், நீர்க்கட்டிகள் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற நீண்ட கால பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. நீடித்த உடல் குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பல பெண்களுக்கு இது உளவியல் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தவும் காரணமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக பெண்களின் வாழ்க்கையையே பெரிதும் பாதிக்கிறது.

GIZ மற்றும் RENATA போன்ற நிறுவனங்கள் மார்பக அயர்னிங் பழக்கத்தைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாதிடுகின்றன. நைஜீரியாவின் சில சட்டங்கள் இந்தப் பழக்கத்தை குற்றமாக அங்கீகரித்துள்ளன. ஆனால், இந்தச் சட்டம் பெரும்பாலும் அமலுக்கு வராமலே உள்ளது. இந்தத் தீங்கு விளைவிக்கும் மூட நம்பிக்கையை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் கல்வியை அதிகரிப்பதும் அவசியம்.

இனி டெபாசிட் கணக்கில் 4 நாமினிகளை சேர்க்கலாம்! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!

PREV
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?