வானத்தில் தெரிந்த UFO.. வீட்டிற்கு பின்னால் நின்ற 10 அடி நபர்.. ஏலியன் பூமிக்கு வந்துவிட்டதா?

Published : Jun 09, 2023, 08:59 PM ISTUpdated : Jun 09, 2023, 09:02 PM IST
வானத்தில் தெரிந்த UFO.. வீட்டிற்கு பின்னால் நின்ற 10 அடி நபர்.. ஏலியன் பூமிக்கு வந்துவிட்டதா?

சுருக்கம்

வானத்தில் இருந்து ஏதோ ஒன்று விழுவதை தான் பார்த்ததாகவும், தனது வீட்டின் பின்புறத்தில், 2 உருவங்களின் அசைவை பார்த்ததாகவும் லாஸ் வேகாஸை சேர்ந்த நபர் தெரிவித்தார்.

ஏப்ரல் 30 ஆம் தேதி, சுமார் 11:50 மணியளவில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ், நெவாடாவில் உள்ள நபர் ஒருவர், இரவு வானத்தில் ஒரு பிரகாசமான ஒளியைப் பற்றி காவல்துறைக்கு தெரிவித்தார். அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (UFO) வானில் பிரகாசமாக நகர்ந்ததாக அவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

வானத்தில் இருந்து ஏதோ ஒன்று விழுவதை தான் பார்த்ததாகவும், தனது வீட்டின் பின்புறத்தில், 2 உருவங்களின் அசைவை பார்த்ததாகவும் தெரிவித்தார். அந்த உருவங்கள் 8 அடி உயரம் மற்றும் 10 அடி உயரம் இருந்ததாகவும், பெரிய பளபளப்பான கண்கள், ஒரு பெரிய வாயுடன் இருந்ததாகவும் அவர் விவரித்தார்.

இதுகுறித்து பேசிய அவர் “ 8 அடி நபர் போன்றவர் இருக்கிறார், மற்றொருவர் உள்ளே இருக்கிறார், அது பெரிய கண்களைக் கொண்டுள்ளது, அது நம்மைப் பார்க்கிறது. இன்னும் அங்கேயே இருக்கிறது" 8 அடி, 9 அடி, 10 அடி மிகப்பெரியவையாக உள்ளன. அவை நமக்கு வேற்றுக்கிரகவாசிகள் போலத் தோன்றுகின்றன. அவர்கள் மனிதர்கள் அல்ல, அவர்கள் 100% மனிதர்கள் அல்ல.  நான் கடவுள் மீது சத்தியம் செய்கிறேன், இது ஒரு நகைச்சுவை அல்ல, இது உண்மையில், நாங்கள் பயப்படுகிறோம்," என்று என்று பதறிப்போய் கூறியுள்ளார்.

பொருளாதார மந்த நிலையில் தவிக்கும் யூரோ மண்டலம்.. ஐரோப்பிய நாடுகளின் நிலைக்கு என்ன காரணம்?

பின்னர் போலீசார் புகார்தாரரை அணுகி கூடுதல் விவரங்களை கேட்டனர். புகார் அளித்த நபரின், நான்கு குடும்ப உறுப்பினர்களில் இருவர் இதேபோன்ற காட்சிகளைப் புகாரளித்தனர். போலீசார் மேலும் ஒரு வாகன ஓட்டியை விசாரிக்க முயன்றனர். துரதிர்ஷ்டவசமாக, விசாரணையில் கூடுதல் விவரங்கள் கிடைக்கவில்லை.

சமீபத்தில், முன்னாள் உளவுத்துறை அதிகாரி, டேவிட் சார்லஸ் க்ரூஷ், இரகசிய தகவல்களை வெளிப்படுத்தினார். மனிதரல்லாத வம்சாவளியை சேர்ந்த வாகனங்களை வைத்திருக்கும் ஆழ்ந்த இரகசிய திட்டங்கள் இருப்பதாக அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, யுஎஃப்ஒவின் ஆதாரங்களை வெளியிடுமாறு அமெரிக்கா வலியுறுத்தப்படுகிறது. யு.எஃப்.ஓக்கள் குறித்த ஆய்வைத் தொடங்கி ஒரு வருடம் கழித்து, நாசா இந்த மாத தொடக்கத்தில் தலைப்பில் தனது முதல் பொதுக் கூட்டத்தை நடத்தியது.

யுஎஃப்ஒக்கள் மற்றும் வேற்றுகிரகவாசிகளை நேரில் பார்த்ததாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவங்கள் பூமிக்கு அப்பாற்பட்டவையா இல்லையா என்பது முக்கியமல்ல என்று குழு உறுப்பினர்கள் நம்புகின்றனர். மேலும் இந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்கு இன்னும் விரிவான ஆராய்ச்சியை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இனி வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வர வேண்டும்.. கூகுள் நிறுவனத்தின் அறிவிப்புக்கு ஊழியர்கள் எதிர்ப்பு..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு