நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து... 80-க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழப்பு..!

Published : Jul 05, 2019, 01:48 PM IST
நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து... 80-க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழப்பு..!

சுருக்கம்

துனிசியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

துனிசியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி படகில் பயணம் செய்து உள்ளனர். அந்த படகில் 80-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். துனிசியா கடற்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்றபோது படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இதில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். படகு கவிழ்ந்ததை பார்த்த மீனவர்கள் சிலர் 4 பேரை மீட்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். கடந்த மே மாதம் ஏற்பட்ட படகு விபத்தில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இத்தாலியில் மலையில் ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள்! 21 கோடி ஆண்டுகள் பழமையானது!
புயல் காரணமாக சரிந்த சுதந்திரச் சிலை.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து.. வெளியான ஷாக் வீடியோ!