கொரோனா வைரஸ் உருவானது இப்படித்தானாம்..? ஸ்மார்ட் போன் விரும்பிகளே உஷார்... நடுநடுங்க வைக்கும் ஆய்வு..!

By Thiraviaraj RMFirst Published Apr 6, 2020, 5:30 PM IST
Highlights

இப்போது வந்திருக்கின்ற வைரஸ் ஆனது 5ஜி நெட்வொர்க்கால் முற்றாக மூடப்பட்ட சீனாவின் வுகான்பகுதியில் இருந்துதான் வந்திருக்கிறது.
 

கொரோனா உருவானது எப்படி? என உலகம் முழுவதும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் செத்துப்போன வவ்வால் ஒன்றை பாம்பு விழுங்க, அந்தப் பாம்பை மனிதன் சாப்பிட்டதால் கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. அது உண்மை கதை அல்ல. வேறு ஒரு மர்மம் இருக்கிறது என அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் தாமஸ் கோவன் என்பவர் கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் உள்ள ஹரிசோனாவில் இருக்கிற மனித உரிமை அமர்வு கூட்டத்தொடரில் பேசினார். 

‘’சீனாவில் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்துவது வேகமெடுத்து வருகிறது. அதாவது சீனாவின் ஹுவேய் என்கிற செல்போன் நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிற  5ஜி நெட்வொர்க்தான் இந்த கொரோனா  வைரஸ் வருவதற்கு காரணம் என்று தனது வாதத்தை முன் வைத்துள்ளார். 

5ஜி நெட்வொர்க் என்பது மின்காந்த அலை வரிசையை ஆகாயத்திலிருந்து மனிதனை நோக்கி தோகை மழையைப் போல பரவி விட்ட காரணத்தால் இந்த நோய் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். உதாரணமாக ஆரம்பத்தில் தொலைபேசிக்கான கோபுரங்களை அமெரிக்காவில் அமைத்தபோது ஆயிரக்கணக்கான பறவைகள் விழுந்து இறந்தன. இதற்கு உதாரணமாக எந்திரன் திரைப்படத்தில் ஒரு முக்கிய திருப்பமாக பட்சிராஜன் என்ற வில்லன் பாத்திரத்தையும் அதன்மூலம் விலகி இருந்தார்கள். இதேபோல டாக்டர் தாமஸ் கோவான் கூறுகின்ற உதாரணமும்  இருக்கிறது.

 

 வட துருவப் பகுதியில் ஆயிரக்கணக்கான டால்பின் மீன்கள் இறந்ததை காரணம் காட்டுகிறார். வைரஸ் பரவி ஒரு பறவையின் மூக்கிலிருந்து இன்னொரு பறவைக்கு சளி பரவிய காரணத்தினால் அந்தப் பறவை வைரசினால் பாதிக்கப்பட்டிருந்தால் இப்படி ஒரு மரணம் நடைபெற்றதாக கூறுகிறார். டால்பின்கள் தும்மி அதனால் கொடிய வைரஸ் பட்டு மரணித்ததாக ஆக கூறமுடியாது. ஆகவே இவற்றிற்கு அப்பால் வேறு ஏதோ ஒன்று இருக்க வேண்டும் அவர் கூறுகிறார்.  முன்னர் செய்திகளில் வந்ததுபோல் 150 வருடங்களாக ஒவ்வொரு காலகட்டத்திலும் கொத்துக் கொத்தாக மனிதன் கொத்துக் கொத்தாக நோய்கள் பரவி இறந்துள்ளான். 

அந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் பூமியில் இருந்து ஏதோ ஒரு பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து இந்த அழிவுகளும் வந்திருக்கிறது. உதாரணமாக 1918ம் ஆண்டு இதுபோலத்தான் ஸ்பேனிஷ் காய்ச்சல் ஏற்பட்டது. அதில் மில்லியன் கணக்கான மக்கள் மடிந்தனர். அந்த நேரத்தில் அதற்கு ஓராண்டு முன்னதாக ரேடியோ கதிர்கள் பூமியிலிருந்து அறிமுகமாகின. இந்த ரேடியோ கதிர்கள் அறிமுகமான ஆறாவது மாதத்தில் ஸ்பேனிஷ் நோய் ஏற்பட்டது.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது விமானங்களை கண்டறிவதற்கான ரேடார்கள் உருவாக்கப்பட்டன. ரேடார்களுக்கான அலைவரிசையை உருவாக்கப்பட்ட போது அடுத்த நோய் தாக்கம் ஏற்பட்டது. 1968 ஆம் ஆண்டு கங்கோன் நோய் வந்தபோது சேட்டிலைட்கள் வானத்தில் பறந்து நமக்குள்ளே சிக்னல்களை பரப்பிய போது மறுபடியும் நோய் உருவானது. பூமியினுடைய காந்த மண்டலம் ஐந்து அடுக்கு பகுதிகளாக இருக்கிறது. இவற்றில் உள்ளே நடக்கின்ற தாக்கங்கள் காரணமாகவும் பூமியை சுற்றி சூரியனிடம் இருந்து வரும் காந்த அலைகள் அந்தத் துகள்களாக மாறுகின்றன.

அணுகுண்டு வெடித்தவுடன் இந்த காந்த துகள்களுக்கு அசைவு ஏற்படுகின்றது. இதுபோலத்தான் இந்த காந்த துகள்கள் பெருந்தொகையாக பூமியை மூடி இருக்கின்ற காரணத்தால் ரேடியோ சிக்னல்கள் மின்காந்த அலை வரிசைகள் பூமியிலிருந்து வானுக்கு சென்று அங்கிருந்து திரும்பி வருகின்ற பொழுது மழைபோல வந்து மனிதனை தாக்குகிறது. இப்படி தாக்குவதற்கும் கொரோனா வைரஸூக்கும் என்னதான் தொடர்பு என்பதையும் அவர் விளக்குகிறார். இப்போது வந்திருக்கின்ற வைரஸ் ஆனது 5ஜி நெட்வொர்க்கால் முற்றாக மூடப்பட்ட சீனாவின் வுகான்பகுதியில் இருந்துதான் வந்திருக்கிறது.

 இந்த வுகான் சீனாவின் தலைவர் மாவோ சேதுங் காலத்திலிருந்தே முக்கியமான விஷயங்கள் நடைபெறுகிற ஒரு இடமாக இருக்கிறது. ஆகவேதான் 5ஜி நெட்வொர்க்கால் கவர் செய்யப்பட்ட முகாமில் இருந்துதான் இந்த கொரோனா வைரஸ் உருவாகியிருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம், வைரஸ் சீனாவில் உருவான குறுகிய நாட்களில் இரண்டு வாரத்தில் ஏறத்தாழ உலகம் முழுவதிலுமே அது பரவிவிட்டது. கப்பலுக்கு உள்ளே சென்றுவிட்டது. விமானத்திற்கு உள்ளே பரவியது. உலகம் முழுவதிலும் அது பரவி கொண்டது.

முன்னர் வந்து ஸ்பேனிஷ் காய்ச்சல் போன்றவைகளும் இப்படித்தான் வேகமாக வந்திருக்கின்றன. வண்டியில் மனிதன் பயணித்துக்கொண்டிருந்த போது கூட இந்த உலகம் இருக்கத்தான் செய்தது. எனவே ஓறோஓணாஆ என்பது மிக வேகமாகவும் பரவுதல் என்பது மர்மமாக இருக்கிறது. ஆகையால் இதற்கான காரணத்தை தம்மால் கூறமுடியாமல் உள்ளது. எனவே 5ஜி நெட்வொர்க் மீது சந்தேகம் வலுக்கிறது. புவி மேற்பரப்பில் லட்சக்கணக்கான சேட்டிலைட் பறந்து கொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து தெறிக்கும் மின்காந்த அலைவரிசைகள் ஒவ்வொரு மனிதனையும் தாக்குகின்றன.

 நமது பாக்கெட்டில் இருக்கின்ற செல்போனிலிருந்து பரவுகின்ற ஒரு தகவல் ஜப்பான் சென்று அதில் இருந்து மற்ற நாடுகளுக்கு அது சுழன்று செல்லுகின்ற பொழுது மில்லியன் கணக்கான அலைவரிசைகள் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சேட்டிலைட்டுக்கும், இன்னொரு சேட்டிலைட்டுக்கும் இடைவெளி கூட 20,000 அலைவரிசைகள் உள்ளதாக இருக்கிறது. இந்த மின்காந்த பகுதியிலிருந்து மோதி அவை புது வடிவம் பெற்று கிரகங்களுடைய தாக்கங்கள் காரணமாக புதிய வடிவம் பெற்று அவை பூமிக்கு வருகின்றன. இவ்வாறு உருவாகின்ற மாற்றம்தான் கொடிய வைரஸ்கள் உருவாதற்கு காரணமென அவர் கூறுகிறார்.

click me!