கொரோனாவிலிருந்து காப்பாற்றி உலகத்தை வென்றான் தமிழன்... வருகிறது தடுப்பூசி !

By Thiraviaraj RMFirst Published May 4, 2020, 3:35 PM IST
Highlights

இதிலும் தமிழர்களின் ஈடுபாடு நிச்சயம் இருக்கும். காரணம் ட்ரம்ப்  இந்தியர்கள் மீது குறிப்பாக தமிழர்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டவர்

இன்று டென்மார்க்கை ஜெர்மன் படைகள் ஆக்கிரமித்து விட்டு சென்ற 75வது ஆண்டு தினமாகும். இன்றைய நாளில் அங்கே பாரம்பரிய அணிவகுப்பு மரியாதைகள் நடக்க வேண்டிய சூழ்நிலையில் கொரோனா காரணமாக அனைத்தும் தடைபட்டு நின்று விட்டது. 

போர் காரணமாக இலங்கையை விட்டு பலரும் வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் எல்லாம் தெருக்களை விட்டு ஓடிவிட்டார்கள். உலகம் முழுவதும் பெரும்பாலும் உள்ள நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் தானே ராஜாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். டென்மார்க்கில் உள்ள தமிழர்கள் தான் கொரோனாவுக்கு பெரும்பாலும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள பல மருத்துவ சாலைகளில் ஈழத்தமிழர்களே மருத்துவர்களாகவும் மருத்துவ நிபுணர்களாகவும் அனைவருக்கும் சிகிச்சை அளித்து கொண்டு வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வருகின்றனர். மற்றொரு பக்கம் கொரோனாவை தடுக்க பல்வேறு பகுதிகளில் ஈழத்தமிழர்கள் பாதுகாக்க பாடுபட்டு வருகிறார்கள். ஆகையால்தான் ஈழத்தில் நடைபெற்ற போரின்போது அங்கிருந்து வெளியேறியவர்கள் புலம்பெயர்ந்தார்கள். இந்த உலகத்தை ஈழ மக்களுக்கு தந்திருக்கிறது  இயற்கை. உலகம் இன்றைய தமிழன் கைகளில் என்பதை தெளிவாக காட்டியிருக்கிறது கொரோனா. ஈழத்தைப் பெற முடியவில்லை என்றாலும் உலகத்தை நம் கைகளில் தந்த அந்த இயற்கை அன்னை கொரோனா வடிவில் விளையாட்டை காட்டி தமிழர்களின் நிலையை உரக்க உணர்த்தி இருக்கிறது. 

அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் நம்பிக்கை தரும் செய்தி படி வரும் ஜனவரி மாதத்திற்கு உள்ளாக உணவுக்கான தளபதி அமெரிக்கா அறிமுகப்படுத்தி விடும் என்கிற நம்பிக்கையான செய்தியை தந்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப். இதிலும் தமிழர்களின் ஈடுபாடு நிச்சயம் இருக்கும். காரணம் ட்ரம்ப்  இந்தியர்கள் மீது குறிப்பாக தமிழர்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டவர்’’ என்கிறார்கள் இலங்கை புலம்பெயர் தமிழர்கள்.

click me!