மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மகளை திருமணம் செய்த தந்தை! நடு ரோட்டில் நடந்த குடுமிபிடி சண்டை!

By manimegalai aFirst Published Oct 7, 2018, 12:34 PM IST
Highlights

பெற்ற தாயின் வாழ்க்கையை பறிக்கும் வகையில், மகள் தன்னுடைய வளர்ப்பு தந்தையை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்ற தாயின் வாழ்க்கையை பறிக்கும் வகையில், மகள் தன்னுடைய வளர்ப்பு தந்தையை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் ஹரிபூர் நகரை சேர்ந்தவர், வாரீஸ் ஷா இவர் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி விவாகரத்து ஆன ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவருக்கு ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் தற்போது வாரீஸ் ஷா,  40 வயதாகும் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, அவருடைய முதல் கணவருக்கு பிறந்த மகளை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து வரீஷாவின் முதல் மனைவி, மகள் மீதும் கணவர் மீதும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வாரீஷா அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்ததால், முதல் மனைவிக்கு பிறந்த மகள் வாரீஷாவை கணவராக ஏற்று கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் வெளியே வந்த தன்னுடைய மகளை அனைவர் மத்தியிலும் இழுத்து போட்டு அடித்தார். பின் இருவரும் அங்கு தலை முடியை பிடித்து சண்டை போட்டு கொண்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சியாக்கியது.

எனினும் தற்போது மீண்டும் வாரீஷாவின் முதல் மனைவி, இது சட்டவிரோதம் என வாதிட்டு வருகிறார். இந்த வழக்கில் ஏற்கனவே வாரீஸ் மற்றும் வாரீஸ் வளர்ப்பு மகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!