பணவீக்கம் குறைந்தாலும் விலைவாசி குறையவில்லை! இலங்கையில் நீடிக்கும் பொருளாதாரச் சிக்கல்!

Published : Aug 12, 2023, 01:01 PM ISTUpdated : Aug 12, 2023, 01:28 PM IST
பணவீக்கம் குறைந்தாலும் விலைவாசி குறையவில்லை! இலங்கையில் நீடிக்கும் பொருளாதாரச் சிக்கல்!

சுருக்கம்

இலங்கையில் பணவீக்கம் குறைந்தாலும் தண்ணீர், உணவு மற்றும் எரிசக்தி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

இலங்கை பணவீக்க விகிதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு, பல மாதங்களில் முதல் தடவையாக இந்த ஜூலை மாதத்தில் ஒற்றை இலக்கத்துக்குக் குறைந்திருக்கிறது. இருப்பினும் தண்ணீர், உணவு மற்றும் எரிசக்தி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு இன்னும் கட்டுக்குள் வராததால், பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

இலங்கையில் பணவீக்கத்தின் சமீபத்திய பாதை கணிசமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் செப்டம்பரில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அப்போது பணவீக்கம் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு அதிகரித்து 69% ஆக உயர்ந்தது. தற்போதைய வீழ்ச்சிக்கு ஓரளவு புள்ளியியல் காரணிகள் காரணமாக இருக்கலாம் என்றும் நாட்டின் விவசாயத் துறையில் கிடைத்த மேம்பட்ட விளைவுகளும் காரணமாக இருக்கலாம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இலங்கை கடந்த ஆண்டு கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சந்தித்தது. இது பணவீக்கத்தின் எழுச்சிக்கு ஒரு ஊக்கியாக செயல்பட்டது. இருப்பினும், திங்களன்று வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களில் நிலைமை வேறுவிதமாக இருப்பதைக் காட்டுகிறது. முக்கியமாக பணவீக்க விகிதத்தில் கிட்டத்தட்ட 50% குறைந்தாலும், ஜூன் மாதத்தில் 12 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதம் ஆகக் குறைந்தது.

நாட்டின் நிதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக சர்வதேச செலாவணி நிதியத்திலிருந்து (IMF) 2.9 பில்லியன் டாலர் கடன் தொகை கிடைத்ததை அடுத்து, மார்ச் மாதத்தில் இருந்து அந்நாட்டின் பொருளாதார நிலை முன்னேற்றம் கண்டுவந்துள்ளது. இருந்தபோதும், அரசு நிறுவனங்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் எரிபொருட்கள் விலையைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றில் ஐஎம்எப் உத்தரவுகளுக்கு இணங்க வேண்டியதன் அவசியத்தை வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அவ்வாறு செய்யத் தவறினால் பணவீக்க அழுத்தங்களை மீண்டும் தூண்டலாம் என்று எச்சரிக்கின்றனர்.

செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தில் தண்ணீர் இருந்திருக்கும்... நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஆதாரம்!

ஃபர்ஸ்ட் கேபிட்டலில் நிறுவனத்தைச் சேர்ந்த டிமந்த மேத்யூ கூறுகையில், "முந்தைய ஆண்டைவிட பணவீக்கத்தின் ஆரம்பக்கட்ட அதிகரிப்பின் விளைவுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் குறையும். அதன்பிறகு, லேசான பணவீக்க உயர்வு, தாக்கம் ஏற்படும். இலங்கை ரூபாய் மதிப்பு சரிவு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும்" என்கிறார்.

ஏழை விளிம்புநிலை மக்கள் ஊழலின் தாக்கத்தை உணர்கிறார்கள்: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

"ஆண்டின் இறுதி காலாண்டில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்படலாம். பணவீக்கம் ஆண்டு இறுதிக்குள் 6% முதல் 8% வரை குறையலாம்" எனவும் அவர் கணித்துள்ளார். இந்த ஆண்டு இலங்கையின் ரூபாய் மதிப்பு சுமார் 10% உயர்ந்தபோதும், ஆண்டின் பிற்பகுதியில் அதிகரித்த இறக்குமதி தேவை ரூபாய் மதிப்பை மீண்டும் பலவீனப்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உலகளாவிய பொருட்களின் விலைகள் உயர்வு மற்றும் நெல் சாகுபடி செய்யப்படும் முக்கியமான பிராந்தியங்களில் வறட்சியின் தாக்கம் ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கை அரசு தண்ணீர் கட்டணத்தை 50% வரை உயர்த்த முடிவு செய்திருப்பதும் விலையேற்றத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.

அந்நாட்டின் நாட்டின் மத்திய வங்கி அடுத்த இரண்டு மாதங்களில் பணவீக்க விகிதத்தை 4 முதல் 6 சதவீத வரம்பிற்குள் கொண்டுவர முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளது.

ஏழை விளிம்புநிலை மக்கள் ஊழலின் தாக்கத்தை உணர்கிறார்கள்: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!