இலங்கையை போல மாறிய இத்தாலி... கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் ஆவேசம்... வைரலாகும் வீடியோ!!

By Narendran SFirst Published Jul 13, 2022, 11:56 PM IST
Highlights

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான காலவரையற்ற போர் இத்தாலிய பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான காலவரையற்ற போர் இத்தாலிய பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரின் நிச்சயமற்ற எதிர்காலம் அவர்களின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக இத்தாலியின் தேசிய புள்ளியியல் நிறுவனம் (ISTAT) கூறுகிறது. இதனால் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது. தேசிய புள்ளியியல் நிறுவனம் படி, நிலைமை யூரோப்பகுதியைத் தாக்கியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரால் ஏற்பட்ட ஆற்றல் பற்றாக்குறையால் இத்தாலிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொழில்துறை உற்பத்தி மற்றும் போக்குவரத்து முறையையும் பாதித்துள்ளது. கடந்த செப்டம்பரில் மீண்டும் ஒருமுறை அறிவிக்கப்பட்ட பெரும் மந்தநிலையை எதிர்கொண்டு வட்டி விகிதங்களை உயர்த்த ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டி… முதல் சுற்றை வென்றார் ரிஷி சுனக்!!

இத்தகைய பொருளாதார சூழ்நிலையில் பொது மக்கள் கூட நம்பிக்கை இழந்துள்ளனர் என தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், வீடுகளில் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. இத்தாலியில் குறைந்த அளவிலான தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகளும் குறைந்துள்ளன. ஏப்ரல் மாதத்தில் 1.5 சதவீதமாக இருந்த இத்தாலியில் சில்லறை விற்பனை மே மாதத்தில் 1.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது தான் ஒரே நம்பிக்கை. கடந்த 60 ஆண்டுகளில், வடக்கு இத்தாலியில் இதுபோன்ற பேரழிவு வறட்சி ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. இது ஆலிவ் எண்ணெய், பாஸ்தா தயாரித்தல் மற்றும் ரிசொட்டோ அரிசி உற்பத்தி ஆகியவற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் ஆலிவ் எண்ணெய், பாஸ்தா மற்றும் ரிசொட்டோ அரிசியில் 90 சதவீதம் இத்தாலியில் இருந்து வருகிறது. இது உலகெங்கிலும் உள்ள ஆலிவ் எண்ணெய், ரிசொட்டோ அரிசி மற்றும் பாஸ்தா ஆகியவற்றின் பங்குகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் இவற்றின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ஏன்? ரணில் விக்கிரமசிங்க விளக்கம்!!

🇮🇹ITALY. Italian citizens storm the city hall in La Spezia after the mayor refused to receive them: "I have no money to buy bread, what is my daughter eating tonight?" pic.twitter.com/CRuKDTfGiK

— AZ 🛰🌏🌍🌎 (@AZmilitary1)

இதற்கிடையில், இத்தாலிய அரசு, எரிவாயு இறக்குமதிக்காக மாஸ்கோவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து எரிவாயு இறக்குமதிக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதை 40 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைத்துள்ளது. எரிவாயு இறக்குமதிக்காக ஜெர்மனியை சார்ந்திருப்பதை இத்தாலி அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஜெர்மனி இன்னும் 35 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதனால், இத்தாலிய அரசால் நாட்டின் பொருளாதாரத்தை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறையால், தொழில்துறை உற்பத்தி மற்றும் போக்குவரத்து ஏற்கனவே குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இத்தாலிய குடிமக்கள் லா ஸ்பெசியாவில் உள்ள நகர மண்டபத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஒரு பெண், ரொட்டி (Bread) வாங்க கூட என்னிடம் பணம் இல்லை. இன்று இரவு என் மகள் என்ன சாப்பிடுவாள்? என்று ஆவேசமாக கேட்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இத்தாலியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது குறுப்பிடத்தக்கது.  

click me!