ஹமாஸ் உடன் 4 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்.. எத்தனை பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்?

Published : Nov 22, 2023, 08:16 AM ISTUpdated : Nov 22, 2023, 08:29 AM IST
ஹமாஸ் உடன் 4 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்.. எத்தனை பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்?

சுருக்கம்

ஹமாஸ் உடன் 4 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 50 பணயக்கைதிகள் விரைவில் விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே 6 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் போருக்கு மத்தியில் இஸ்ரேல் அரசாங்கம் முதன்முறையாக இன்று (புதன்கிழமை) போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது, அதில் 50 பெண்கள் மற்றும் குழந்தைகளை ஹமாஸ் விடுவிக்க உள்ளது.. எவ்வாறாயினும், இது போரின் முடிவு அல்ல என்று போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். ஹமாஸ் ஒழிக்கப்படும் வரை மற்றும் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போர் தொடரும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் "நாங்கள் போரில் இருக்கிறோம், நாங்கள் எங்கள் இலக்குகளை அடையும் வரை நாங்கள் போரைத் தொடருவோம். ஹமாஸை அழிக்கவும், எங்கள் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் வரையிலும், காசாவில் உள்ள எந்தவொரு நிறுவனமும் இஸ்ரேலை அச்சுறுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தவும்," என்றும் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கத்தாரின் அதிகாரிகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்தனர். மேலும் பணயக்கைதிகள் மற்றும் குறைவான சலுகைகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உதவியதாக நெதன்யாகு கூறினார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: முக்கிய தகவல்கள்

  • தற்போது நடைபெற்று வரும் போரில் இது முதல் இடைநிறுத்தம் ஆகும். இந்த நிறுத்தத்தின் காரணமாக மனிதாபிமான உதவிகள் காஸாவுக்குள் நுழையும்.
  • 4 நாள் நிறுத்தத்தில், 50 பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹமாஸால் விடுவிக்கப்படுவார்கள்.
  • போர்நிறுத்தம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பணயக்கைதிகள் வியாழக்கிழமை முதல் விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • மனிதாபிமான போர் நிறுத்தத்தை வரவேற்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 150 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று கூறியது.

போர் நிறுத்தம் தொடர்பாக நேற்றிரவு இரவு முழுவதும் நடந்த கூட்டத்தை தொடர்ந்து இரு தரப்பும் ஒப்பந்தத்தை உறுதி செய்தன. இது கடினமான முடிவுதான், ஆனால் சரியான முடிவு தான் என்று நெதன்யாகு தெரிவித்தார். எனினும் அவர் தனது போர் அமைச்சரவையில் இருந்து எதிர்ப்பை எதிர்கொண்டார்,

காசாவின் ஷிஃபா மருத்துவமனையில் 55 மீ., நீளமும், 10 ஆடி ஆழமும் கொண்ட சுரங்கப்பாதை: இஸ்ரேல் வீடியோ வெளியீடு!!

பணயக்கைதிகள் யார்?

அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பின்னர் சுமார் 240 பேர் ஹமாஸ் அமைப்பால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இந்த பணயக் கைதிகளில் இஸ்ரேலிய குடிமக்களைத் தவிர, அமெரிக்கா, தாய்லாந்து, பிரிட்டன், பிரான்ஸ், அர்ஜென்டினா, ஜெர்மனி, சிலி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாதிக்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் வெளிநாட்டு மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளனர் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் பிப். 12-ல் பொதுத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
ஜப்பான் நிலநடுக்கத்தின் போது வானில் தோன்றிய நீல நிற ஒளி!