Uber-ஐ பயன்படுத்தி 800க்கும் மேற்பட்டவர்களை கடத்திய இந்தியர்.. அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு உத்தரவு

Published : Jun 29, 2023, 09:05 AM ISTUpdated : Jun 29, 2023, 09:08 AM IST
Uber-ஐ பயன்படுத்தி 800க்கும் மேற்பட்டவர்களை கடத்திய இந்தியர்.. அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு உத்தரவு

சுருக்கம்

Uberஐப் பயன்படுத்தி 800 க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்காவிற்கு கடத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார்

Uber செயலி மூலம் 800க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களை அமெரிக்காவிற்கு கடத்தியதற்காக 49 வயதான இந்திய வம்சாவளி நபருக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜஸ்பால் கில் என்றழைக்கப்படும் ராஜிந்தர் பால் சிங் பிப்ரவரி மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கனடாவில் இருந்து நூற்றுக்கணக்கான இந்திய பிரஜைகளை எல்லை வழியாக கொண்டு வந்து கடத்தல் கும்பலின் முக்கிய உறுப்பினராக தான் இருந்ததாகவும், இதன் மூலம் 500,000 அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான பணம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்..

அமெரிக்காவின் வழக்கறிஞர் டெஸ்ஸா எம் கோர்மன் இதுகுறித்து பேசிய போது “ கலிபோர்னியாவில் வசிக்கும் பால் சிங்குக்கு செவ்வாயன்று அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் போக்குவரத்துக்கான சதி மற்றும் சில ஏலியன்ஸ் லாபத்திற்காகவும், பணமோசடி செய்ய சதி செய்ததற்காகவும் 45 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரை உலுக்கிய கொலை வழக்கு.. சிறையில் உள்ள இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை..

4 வருட காலப்பகுதியில், ராஜிந்தர் பால் சிங் 800 க்கும் மேற்பட்டவர்களை வடக்கு எல்லை வழியாக அமெரிக்காவிற்கும் வாஷிங்டன் மாநிலத்திற்கும் கடத்த ஏற்பாடு செய்தார். அவரின் இந்த செயல் அமெரிக்காவில் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கான இந்தியர்களின் நம்பிக்கையை சிதைத்தது" என்று கோர்மன் கூறினார்.

ஜூலை 2018 முதல், கனடாவில் இருந்து சியாட்டில் பகுதிக்கு சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டியவர்களை ராஜிந்தர் பால் சிங் மற்றும் அவரது சக கூட்டாளிகள் Uber- ஐப் பயன்படுத்தினர். 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து 2022 மே மாதம் வரை, அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட இந்திய பிரஜைகளின் போக்குவரத்து சம்பந்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட பயணங்களை ராஜிந்தர் பால் சிங் ஏற்பாடு செய்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஜூலை 2018 மற்றும் ஏப்ரல் 2022 க்கு இடையில், கடத்தல் கும்பலுடன் இணைக்கப்பட்ட 17 UBer கணக்குகள் 80,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூலித்துள்ளன. வாஷிங்டன் மாநிலத்திற்கு வெளியே கடத்திச் செல்லப்பட்டவர்களை அவர்களின் இறுதி இடங்களுக்கு கொண்டு செல்ல ராஜிந்தர் பால் சிங்கின் கூட்டாளிகள் ஒரு வழி வாகன வாடகையைப் பயன்படுத்துவார்கள், இது வழக்கமாக அதிகாலையில் எல்லைக்கு அருகில் தொடங்கி வெவ்வேறு சவாரிகளுக்கு இடையில் பிரிக்கப்பட்டது.

கலிபோர்னியாவில் உள்ள ராஜிந்தர் பால் சிங்கின் வீட்டில் ஒன்றில் இருந்து 45,000 அமெரிக்க டாலர்கள் ரொக்கம் மற்றும் போலி அடையாள ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் புரோட்டீன் ஷேக் உட்கொண்டதால் உயிரிழந்த இந்திய வம்சாவளி சிறுவன்.. நீதி விசாரணையில் அதிர்ச்சி தகவல்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!