“நான் பிரதமரான பிறகு பலமுறை வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளேன்.. ஆனால்..” பிரதமர் மோடி பேச்சு

Published : Jun 22, 2023, 08:52 PM ISTUpdated : Jun 22, 2023, 09:18 PM IST
 “நான் பிரதமரான பிறகு பலமுறை வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளேன்.. ஆனால்..”  பிரதமர் மோடி பேச்சு

சுருக்கம்

இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்காக வெள்ளை மாளிகையின் வாயில்கள் இவ்வளவு பெரிய அளவில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று வெள்ளை மாளிகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியை வரவேற்று பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “ வெல்கம், மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் “ அரசுமுறைப் பயணமாக உங்களை இங்கு முதன்முதலில் விருந்தளித்ததில் நான் பெருமைப்படுகிறேன்.

இந்தியாவும் அமெரிக்காவும் வறுமையை ஒழித்தல், சுகாதார வசதிகளை விரிவுபடுத்துதல், பருவநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்தல் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யப் போரால் தூண்டப்பட்ட உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மையைக் கையாள்வதில் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன. உங்கள் ஒத்துழைப்போடு, இலவச, திறந்த, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் நாட்டிற்காக QUADஐ பலப்படுத்தியுள்ளோம்.” என்று தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு.. அதிபர் ஜோ பைடன், ஜில் பைடனுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்..

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ அன்பான வரவேற்புக்கு அதிபர் பைடனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். உங்கள் நட்புக்கு நன்றி. நான் பிரதமரான பிறகு பலமுறை வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளேன். இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்காக வெள்ளை மாளிகையின் வாயில்கள் இவ்வளவு பெரிய அளவில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை.

 

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் சமூகங்களும் நிறுவனங்களும் ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டவை. இரு நாடுகளின் அரசியலமைப்புகளும் "நாங்கள் மக்கள்" என்ற  வார்த்தைகளுடன் தொடங்குகின்றன. இரு நாடுகளும் தங்கள் பன்முகத்தன்மையில் பெருமிதம் கொள்கின்றன மற்றும் அனைவரின் நலன்' என்ற அடிப்படைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளன.

கோவிட் சகாப்தத்திற்குப் பிந்தைய காலத்தில், உலக ஒழுங்கு ஒரு புதிய வடிவத்தை எடுத்து வருகிறது. இந்த காலகட்டத்தில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவு, முழு உலகத்தின் வலிமையை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும். உலக நன்மை மற்றும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்காக இணைந்து செயல்பட இந்தியாவும் அமெரிக்காவும் உறுதிபூண்டுள்ளன” என்று தெரிவித்தார். 

"Welcome Mr Prime Minister" இந்தியா - அமெரிக்கா உறவை புகழ்ந்து தள்ளிய அதிபர் ஜோ பைடன்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு