
பெரிய விண்கல் ஒன்று 3 துண்டுகளாக உடைந்து, பூமியை பிளந்து உள்ளே நுழைந்த காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது.
பூமியில் அந்த விண்கல் விழுந்த இடத்தை குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. காரணம், அந்த கல்லின் மதிப்பு, தங்கத்தை விட 40 மடங்கு விலை உயர்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அந்த வீடியோ காட்சியில், பெரிய தீப்பொறிகள் பூமியை உடைத்து பிளந்து கொண்டு 3 துண்டுகளாக வானத்தில் ராக்கெட்டுகள் போல் வேகமாக செல்கிறது. ஆனால், அந்த விண்கல் விழுந்த இடம் இதுவரை மர்மமாகவே உள்ளது.
மெக்சிகோ எல்லை அருகே இந்த பெரிய விண்கல் விழுந்து வெடித்ததாக, அங்குள்ள உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இந்த விண்கல் மெக்னீசியம் மற்றும் சோடியத்தால் ஆனது என நம்பப்படுகிறது. கடந்து 3 மாதங்களுக்கு முன் 30 டன் எடையுள்ள உலகின் 2வது பெரிய விண்கல் அர்ஜென்டீனாவில் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.