அணுஆயுத நிலைநிறுத்தம் குறித்து எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் - அமெரிக்காவை கலாய்த்த ரஷ்யா

By Ramya sFirst Published May 27, 2023, 4:21 PM IST
Highlights

அணுஆயுத நிலைநிறுத்தம் குறித்து தங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என அமெரிக்காவிடம் ரஷ்யா கூறியுள்ளது

பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் ரஷ்யாவின் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் விமர்சனத்தை ரஷ்யா இன்று நிராகரித்தது. பல ஆண்டுகளாக அமெரிக்கா தான் ஐரோப்பாவில் அத்தகைய அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நேற்று இதுகுறித்து பேசிய போது, பெலாரஸில் அணுவாயுதங்களை நிலைநிறுத்துவதற்கான திட்டத்துடன் ரஷ்யா முன்னேறியுள்ளது என்ற தகவல், மிகவும் எதிர்மறையான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை ரஷ்யாவின் அணுசக்தி திட்டத்தை கண்டித்தது.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தான் இளைஞர் இந்தியாவை புகழ்ந்து சிலாகிக்க இதுதான் காரணமா?

இந்நிலையில் அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ எங்களுக்கு எதிராக வாஷிங்டனால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு பெரிய அளவிலான கலப்பினப் போருக்கு மத்தியில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ரஷ்யா மற்றும் பெலாரஸின் இறையாண்மை உரிமை.

நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எங்கள் சர்வதேச சட்டக் கடமைகளுடன் முழுமையாக ஒத்துப்போகின்றன. அமெரிக்காவின் இந்த விமர்சனம் பாசாங்குத்தனமானது. மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதற்கு முன், அமெரிக்கா  சில சுயபரிசோதனைகளைப் பயன்படுத்தலாம். அமெரிக்கா பல தசாப்தங்களாக ஐரோப்பாவில் தனது அணு ஆயுதங்களின் ஒரு பெரிய ஆயுதக் களஞ்சியத்தை பராமரித்து வருகிறது. அதன் நேட்டோ நட்பு நாடுகளுடன் சேர்ந்து அது அணுசக்தி பகிர்வு ஏற்பாடுகளிலும், நமது நாட்டிற்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சூழ்நிலைகளிலும் பங்கேற்கிறது. எனவே அணு ஆயுதம் குறித்து அமெரிக்கா எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.

உக்ரைன் மோதலின் போது ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கருத்துக்கள் காரணமாக 1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் உலகம் மிகப்பெரிய அணுஆபத்தை எதிர்கொள்கிறது என்று அமெரிக்கா கூறியது, ஆனால் ரஷ்யா தனது நிலைப்பாடு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பு எதிராக ரஷ்யாவின் நிலத்தை காக்க இந்த போர் நடைபெறுவதாக கூறிய புடின், மற்ற எந்த நாட்டையும் விட அதிக அணு ஆயுதங்களைக் கொண்ட ரஷ்யா, தன்னைத் தற்காத்துக் கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்று பலமுறை எச்சரித்துள்ளார். அந்த வகையில் ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸில் புடின் அணு ஆயுதங்களை நிலை நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மெட்டாவின் சமீபத்திய பணிநீக்கம்.. இந்தியாவின் 2 முக்கிய நிர்வாகிகளும் வேலை இழந்ததால் அதிர்ச்சி..

click me!