கொரோனா வார்டில் ‘டூபீஸ்’நீச்சல் உடையில் சேவை... நர்ஸுக்கு அடித்த ஜாக்பாட்..!

By Thiraviaraj RMFirst Published May 22, 2020, 2:10 PM IST
Highlights

மருத்துவமனையில் ‘டூபீஸ்’நீச்சல் உடை அணிந்து கொரோனா வார்டில் பணிபுரிந்த செவிலியருக்கு விளம்பரத்துறாஇ மாடலாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

மருத்துவமனையில் ‘டூபீஸ்’நீச்சல் உடை அணிந்து கொரோனா வார்டில் பணிபுரிந்த செவிலியருக்கு விளம்பரத்துறாஇ மாடலாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் துலா என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் வார்டில் ஒரு இளம் செவிலியர் கோடை வெயில் வறுத்தெடுத்து வருவதால்‘டூபீஸ்’நீச்சல் உடை அணிந்து, அதன் மேல் கொரோனா வைரஸ் வார்டில் பணிபுரிவதற்கு உரிய பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்தார்.

 

இது ரஷ்யா முழுவதும்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி அப்பகுதி சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. சுகாதாரம் மற்றும் தோற்றத்துக்கு இணங்க நர்சுகள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அந்த செவிலியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அவரது சக செவிலியர்களூம் மருத்துவர்களும் நடியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் உள்ளாடை தெரியும் விதத்தில் பாதுகாப்பு உடை அணிந்து பணி செய்ததால் பரபரப்பை ஏற்படுத்திய 23 வயதான நர்ஸ் நடியாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்தச் சர்ச்சையிலும் அவருக்கு ஒரு நன்மையும் ஏற்பட்டுள்ளது. தற்போது பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் லிங்கரி என்ற நிறுனத்தின் தலைவரான அனஸ்தேசியா யகுஷேவா செவிலியர் நடியா எங்கள் நிறுவன மாடலாக வேண்டும் என்று விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அவருக்காக பல புதிய தயாரிப்புகளை உருவாக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ள அவர், எதிர் காலத்தில் வருடாந்திர ஒப்பந்தம் ஒன்றையும் அவருடன் செய்துகொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார். இதனால் அந்த செவிலியர் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார். 

click me!