2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்கும் அமேசான் புண்ணியவான்...

By Muthurama LingamFirst Published Apr 5, 2019, 3:16 PM IST
Highlights

உலக விவாகரத்து செட்டில்மெண்ட் வரலாற்றில் முதல்முறையாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமோசன் நிறுவனத்தின் ஓனர் ஜெப் பெசோஸ் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை ஜீவனாம்சமாக வழங்க ஒத்துக் கொண்டுள்ளார்.

உலக விவாகரத்து செட்டில்மெண்ட் வரலாற்றில் முதல்முறையாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமோசன் நிறுவனத்தின் ஓனர் ஜெப் பெசோஸ் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை ஜீவனாம்சமாக வழங்க ஒத்துக் கொண்டுள்ளார்.

அமேசான், உலகின் முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்று. ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மக்கின்சியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். 1994-ல் அமேசான் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர்கள் இருவரின் திருமணம் 1993 செப்டம்பரில் நடந்தது.

சென்ற சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.அமேசான் நிறுவனத்தின் தொடக்கம் மற்றும் அடுத்தடுத்த அசுர வளர்ச்சி போன்றவற்றில் கணிசமான பங்களிப்பு மக்கின்சிக்கும் உண்டு.ஆனால், அமேசான் நிறுவனத்தில் பங்குதாரராக அவர் இல்லை. ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் 16 சதவீத பங்குகள் வைத்துள்ளார். அவற்றின் மதிப்பு 136 பில்லியன் டாலர். (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஆகும்)

ஜெஃப் பெசோஸும், அவரது மனைவி மக்கின்சியும் தங்களது 25 ஆண்டு கால மண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்ததை தொடர்ந்து மனைவி மக்கன்சிக்கு ஜீவனாம்ச தொகை வழங்க வேண்டியிருந்தது. அமெரிக்க சட்டப்படி ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான சொத்துகளில் பாதியளவில் மனைவி மக்கின்சிக்கும் உரிமை உள்ளது.

அதன்படி அமேசான் நிறுவனத்தில் ஜெஃப் பெசோஸ் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் பாதியளவான 8 சதவீத பங்குகளை மக்கின்சிக்குக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவருக்கு 68 பில்லியன் டாலர் சொத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் கணவர் ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் 4 சதவீத பங்குகளை மட்டும் பெற்றுக் கொள்ள மக்கன்ஸி ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து இருவரும் நேற்று விவகாரத்து சொத்து உடன்பாட்டில் நேற்று கையெழுத்திட்டனர். இதன்படி அமேசான் நிறுவனத்தில் தான் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் 75 சதவீதத்தை பெசோஸ் தொடர்ந்து வைத்துக் கொள்வார். அதேசமயம் மீதமுள்ள 25 சதவீதத்தை மட்டும் மக்கனிஸி பெறுகிறார். இதன் மூலம் அமேசான் நிறுவனத்தில் பெசோஸூக்கு 12 சதவீத பங்குகளும், மக்கன்ஸிக்கு 4 சதவீத பங்குகளும் என பிரிக்கப்பட்டுள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக மக்கன்ஸி தெரிவித்துள்ளார்.

இது மட்டுமின்றி வாஷிங்டன் போஸ்ட் உட்பட மற்ற நிறவனங்களில் உள்ள தனது பங்குகளையும் கணவர் பெசோஸூக்கு விட்டுக் கொடுக்க அவர் முன் வந்துள்ளார்.அமேசான் பங்குகளில் 4 சதவீதம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும். உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கான விவகாரத்து சொத்து உடன்பாடாக இது கருதப்படுகிறது.

click me!