ஆக்டோபஸை விழுங்கிய 55 வயதான நபர்.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்.. பின்னர் நடந்தது என்ன?

Published : Jul 06, 2023, 02:13 PM IST
ஆக்டோபஸை விழுங்கிய 55 வயதான நபர்.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்.. பின்னர் நடந்தது என்ன?

சுருக்கம்

55 வயது நபர் ஒருவர், ஆக்டோபஸை விழுங்கியதால், அது அவரின் உயிருக்கே ஆபத்தாக மாறியது..

மனிதர்கள் பலவகையான விலங்குகளை சாப்பிடுகிறார்கள், சில சமயங்களில் சுவைக்காகவும் சில சமயங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்காகவும் இறைச்சி உணவுகளை சாப்பிடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் விலங்குகளை சாப்பிடுவதும் தவறாகிவிடும். அப்படி தான் சிங்கப்பூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. 55 வயது நபர் ஒருவர் ஆக்டோபஸை விழுங்கியதால், அது அவரின் உயிருக்கே ஆபத்தாக மாறியது..

சிங்கப்பூரில் மகளின் மரணத்திற்கு காரணமான தாய்.. 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க அரசு தரப்பு கோரிக்கை..

எட்டு கால்கள் கொண்ட கடல் உயிரினமான ஆக்டோபஸ், அடங்கிய உணவை உட்கொண்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆக்டோபஸை விழுங்கிய உடனேயே, அந்த நபர் வாந்தி எடுக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது உடலில் நீர்ச்சத்து குறைந்து கொண்டே சென்றதால் உடல்நிலை மோசமானது. இறுதியில், அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலையைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் நோயாளியின் உணவுக்குழாய், வாயை வயிற்றுடன் இணைக்கும் தசைக் குழாயை மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். இரைப்பைஉணவுக்குழாய் சந்திப்பு எனப்படும் உணவுக்குழாய் இரைப்பையை சந்திக்கும் இடத்திலிருந்து 5 செமீ தொலைவில் ஆக்டோபஸின் வியக்கத்தக்க படங்கள் ஸ்கேன் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் அந்த ஆக்டோபஸை அகற்றுவதற்கான ஆரம்ப முயற்சிகள் தோல்வியுற்ற போதிலும், இறுதியில் அதை வெற்றிகரமாக அகற்றினர். இந்த செயல்முறைக்குப் பிறகு நோயாளி விரைவாக குணமடைந்தார் என்றும் இரண்டு நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டான் டோக் செங் மருத்துவமனையின் மருத்துவக் குழு, தாங்கள் மருத்துவமனையில் பணிபுரியும் போது அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உணவு அடைப்பு என்று கூறியது. தோராயமாக 10 முதல் 20 சதவீத வழக்குகளுக்கு எண்டோஸ்கோபிக் சிகிச்சை தேவைப்படுகிறது, அதே சமயம் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவம் 2018 இல் நடந்தது. உலகின் முன்னணி மருத்துவ இதழ்களில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆக்டோபஸ் தொண்டைக்குள் சிக்கிக்கொள்ளும் சம்பவம் நடைபெறுவது இது முதன்முறையல்ல. முன்னதாக, 2016-ம் ஆண்டில் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் 2 வயது சிறுவனின் தொண்டையில் ஆக்டோபஸ் சிக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

1 கிலோ ரூ.9 கோடி! உலகின் மிகவும் விலை உயர்ந்த டீ இதுதான்.. ஏன் இவ்வளவு காஸ்ட்லி?

PREV
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!