Sep 18, 2018, 9:52 AM IST
மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாமல், தாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம். அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது அதிமுக போட்ட பிச்சை எனப் பேசினார். ஐந்து முறை முதல்வர், திராவிடக் கட்சியின் 50 ஆண்டுகால தலைவர் என்கிற மரியாதை துளி கூட இல்லாமல் அமைச்சர் இப்படி கொச்சை படுத்தும் விதமாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.