Sri lanka Crisis : இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்!

Jul 13, 2022, 8:28 AM IST

இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் உச்சகட்டமாக மக்கள் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு கைப்பற்றியுள்ளனர். அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராணுவ ஜெட் விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார் மாலத்தீவில் உள்ள கோத்தபய ராஜபக்சே ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பதவி விலகல் விவகாரம்… புதிய நிபந்தனைகளை முன்வைத்த கோட்டாபய ராஜபக்சே!!
 

இலங்கையின் புதிய இடைக்கால பிரதமராகிறார் சஜித் பிரேமதாச! - 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு?