இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து மீண்டும் போராட்டக்காரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்

Aug 19, 2022, 2:07 PM IST

இலங்கை பொருளாதார வீழ்ச்சியைக் கண்டித்து போராட்டக்காரார்கள் நூறு நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த வாரம் இவர்கள் போராட்டக்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து தற்போது தாய்லாந்தில் தங்கி இருக்கிறார். இம்மாதம் 24ஆம் தேதி இலங்கை திரும்புவார் என்று கூறப்படுகிறது. அவசரநிலை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கும் நிலையில், அரசாங்கத்தை எதிர்த்து மீண்டும் போராட்டக்காரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது அதிபராக ரணில் விக்ரமசிங்கே, பிரதமராக தினேஷ் குணவர்தன பதவி வகித்து வருகின்றனர்.