விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! இரங்கல் தெரிவித்த கையோடு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

Published : Jan 04, 2025, 03:25 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள அப்பைநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 

விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் (56), குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன் (54), காமராஜ் (54), வீரார்பட்டியைச் சேர்ந்தகண்ணன் (54) , அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (46), செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் (37) ஆகிய 6 நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் என்பவருக்கு
சிறப்பு சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !
04:02தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை....கூட்டணியும் இல்லை ! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
03:47சிவகங்கை | சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்....சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !
04:45தூக்கி வீசினார் எடப்பாடி.! தாங்கி பிடித்தார் தளபதி.! செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு...
05:09பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் ! குவிந்த ரசிகர்கள்
04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
03:18தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?