Velmurugan s | Published: Mar 14, 2025, 4:00 PM IST
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்: டாஸ்மாக்கில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. வெளிப்படை தன்மையோடு டெண்டர் நடைபெற்றது. முறைகேடு புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். அதிமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறைதான் டாஸ்மாக்கில் பின்பற்றப்பட்டது. டாஸ்மாக் நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் இயங்கி வருகிறது. டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் என பொய்யான குற்றசாட்டை முன் வைக்கின்றனர்.