தென்காசியில் மீதி சில்லறை கேட்ட குடிமகன் மீது தாக்குதல் முயற்சி

தென்காசியில் மீதி சில்லறை கேட்ட குடிமகன் மீது தாக்குதல் முயற்சி

Published : Oct 01, 2022, 11:53 AM IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மதுபானக் கடையில் தேவையான மதுபான வகைகளை வாங்கிக் கொண்டு மீதி சில்லறை கேட்ட வாடிக்கையாளர் மீது விற்பனையாளர் தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் தீர்த்தாரபுரம் செல்லும் சாலையில்  இயங்கி வரும் அரசு மதுபான கடையில் மது பிரியர் ஒருவர் ரூபாய் 600 மொத்தமாக கொடுத்து மது வாங்கியுள்ளார். அதில் ரூபாய் 590 போக மீதி பத்து ரூபாய் சில்லறை கேட்டுள்ளார். அப்போது கடையின் விற்பனையாளரான செல்வம் மது வாங்கியதற்கு மொத்த ரூபாயும் சரியாகிவிட்டது. மீதி சில்லறை இல்லை என்று கூறியுள்ளார். 
இதற்கு  மது பிரியர் மது வாங்கியதற்கான கணக்குகளை திரும்ப அவரிடம் சொல்லி மீதி பத்து ரூபாய் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடை விற்பனையாளர் செல்வம் மதுக்கடையின் உள்ளிருந்து கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து மது பிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கவும் முற்பட்டார். இதனை அருகில் இருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
 

03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !
08:06மாணவன் தமிழ்செல்வன் உயிரிழப்பு : குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் முற்றுகைப் போராட்டம்!
06:13திருச்சி : அமைச்சர் நேருவின் பேச்சுக்கு துரை வைகோ பரபரப்பு பதில் !
03:51வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
05:38விழித்திரை காப்போம்’ முன்னோடி திட்டத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் டாக்டர் கே.சி. அருண்ராஜ்
05:16தமிழ்நாட்டின் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி
05:51மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
06:47விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
06:20புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
Read more