தென்காசியில் மீதி சில்லறை கேட்ட குடிமகன் மீது தாக்குதல் முயற்சி

தென்காசியில் மீதி சில்லறை கேட்ட குடிமகன் மீது தாக்குதல் முயற்சி

Published : Oct 01, 2022, 11:53 AM IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மதுபானக் கடையில் தேவையான மதுபான வகைகளை வாங்கிக் கொண்டு மீதி சில்லறை கேட்ட வாடிக்கையாளர் மீது விற்பனையாளர் தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் தீர்த்தாரபுரம் செல்லும் சாலையில்  இயங்கி வரும் அரசு மதுபான கடையில் மது பிரியர் ஒருவர் ரூபாய் 600 மொத்தமாக கொடுத்து மது வாங்கியுள்ளார். அதில் ரூபாய் 590 போக மீதி பத்து ரூபாய் சில்லறை கேட்டுள்ளார். அப்போது கடையின் விற்பனையாளரான செல்வம் மது வாங்கியதற்கு மொத்த ரூபாயும் சரியாகிவிட்டது. மீதி சில்லறை இல்லை என்று கூறியுள்ளார். 
இதற்கு  மது பிரியர் மது வாங்கியதற்கான கணக்குகளை திரும்ப அவரிடம் சொல்லி மீதி பத்து ரூபாய் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடை விற்பனையாளர் செல்வம் மதுக்கடையின் உள்ளிருந்து கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து மது பிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கவும் முற்பட்டார். இதனை அருகில் இருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
 

07:48அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க வகையில் முதல்வர் பேசியுள்ளார் ! ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி
03:09பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைக்க பிளான் போடும் கோ.தளபதி ....! திமுகவின் உள்ளடி அரசியல்..!
03:21NDA கூட்டணியில் இணைய ஐயா போட்ட கண்டிஷன்..! 2026-ல் உடையுமா மாம்பழம்?
03:01அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் அதிரடி....கதிகலங்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் !
03:08OPS vs EPS | வன்னியர்களை பகடையாக்க அஸ்திரம்..! ஓபிஎஸை வைத்து திமுக மாஸ்டர் பிளான்!
05:092026 தேர்தல் திமுகவுக்கு ஒரு சவாலாகவும், விஜய்க்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவும் அமையப்போவது உறுதி !
03:54முதல்வர் அவர்கள் அதிமுக கட்சிக்காக பொய் நீலி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றார் ! அண்ணாமலை பேட்டி
03:24அடிப்படை வசதி இல்லாத மக்களுக்கு வசதி செய்வதுதான் இருக்கலே மகத்தான பணி என்று கருதுகிறேன் - Ptr
03:13மதுரை | 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு துணை ராணுவம் நடைபயணம் ஒத்திகை !
04:52வரலாறு காணாத Gas சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சி - செல்வப் பெருந்தகை பேட்டி
Read more