Government warns ration card holders:வறுமைக்கோட்டை போக்கும் வகையில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டி, இலவசமாகவும் மானிய விலையிலும் உணவுப் பொருட்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. அதன்படி, ரேஷன் கார்டு வழங்கப்பட்டு, நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருட்கள் தரப்படுகின்றன. தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பொது வினியோகத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை வெளிச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.