கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பரவலாக தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருகிறது அரசும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ரெட் அலர்ட் கொடுத்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது இன்று ஏரலில் திங்கள்கிழமை திறந்தவெளி வாரச்சந்தை நடைபெறுவதால் எதிர்பாராத விதமாக இந்த மழை காற்றுடன் வந்ததால் வியாபாரிகள் தங்கள் காய்கறிகளை காப்பாற்ற பிளாஸ்டிக் போர்வைகளைக் கொண்டு போராடி மூடினார் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளில் ஓரங்களில் தஞ்சை புகுந்தனர் இதனால் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி வியாபாரம் பாதித்தது.