புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய மக்கள் 86,000 பேருக்கு பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், 6 மாதங்களில் பட்டா வழங்கும் பணியை முடிக்க 2 குழுக்களையும் அமைத்துள்ளார். இதன் மூலம் 63 ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.