முதலமைச்சர் அரசியல் நாகரிகம் கருதி விஜயைக் கைது செய்யவில்லை..! சபாநாயகர் அப்பாவு பேட்டி

Published : Nov 06, 2025, 04:00 PM IST

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, "முதலமைச்சர் குறுகிய மனப்பான்மையுடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்" என நடிகர் விஜய் விமர்சித்தது குறித்துக் கேட்டபோது, சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: "யாருடைய மனப்பான்மை குறுகியது என்பதை நாடே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. 41 பேர் இறந்த துயரச் சம்பவத்தில், ஒரு நிமிடம் கூட நிற்காமல் சென்னைக்குத் திரும்பி தன் இல்லத்தில் அமர்ந்துகொண்டாரா அல்லது இரவு முழுவதும் தூங்காமல் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, இறந்தவர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கி, உலகமே பாராட்டும் அளவுக்குச் செயல்பட்டாரா எங்கள் முதலமைச்சர்? கொடூரமான எண்ணம் இருந்திருந்தால், அந்த 41 பேர் இறப்புக்குக் காரணமானவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். ஆனால், 'எந்தத் தலைவரும் தன் தொண்டர்களைக் கொலை செய்ய நினைக்க மாட்டார்கள்' என்று எவ்வளவு பெருந்தன்மையுடன் முதலமைச்சர் கூறியுள்ளார். இதைச் சிறுமைப்படுத்துபவர்கள் சிறுமைப்பட்டுப் போவார்கள்," என்றார். மேலும், "தைரியம் இருந்தால் விஜயைக் கைது செய்திருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அப்படிச் செய்திருந்தால், 2026-ல் அவருக்காக ஒரு புரட்சியே வெடித்திருக்கும். முதலமைச்சர் அரசியல் நாகரிகம் கருதி அவ்வாறு செய்யவில்லை," என்றும் குறிப்பிட்டார்

07:48அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க வகையில் முதல்வர் பேசியுள்ளார் ! ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி
03:09பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைக்க பிளான் போடும் கோ.தளபதி ....! திமுகவின் உள்ளடி அரசியல்..!
03:21NDA கூட்டணியில் இணைய ஐயா போட்ட கண்டிஷன்..! 2026-ல் உடையுமா மாம்பழம்?
03:01அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் அதிரடி....கதிகலங்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் !
03:08OPS vs EPS | வன்னியர்களை பகடையாக்க அஸ்திரம்..! ஓபிஎஸை வைத்து திமுக மாஸ்டர் பிளான்!
05:092026 தேர்தல் திமுகவுக்கு ஒரு சவாலாகவும், விஜய்க்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவும் அமையப்போவது உறுதி !
03:54முதல்வர் அவர்கள் அதிமுக கட்சிக்காக பொய் நீலி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றார் ! அண்ணாமலை பேட்டி
03:24அடிப்படை வசதி இல்லாத மக்களுக்கு வசதி செய்வதுதான் இருக்கலே மகத்தான பணி என்று கருதுகிறேன் - Ptr
03:13மதுரை | 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு துணை ராணுவம் நடைபயணம் ஒத்திகை !
04:52வரலாறு காணாத Gas சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சி - செல்வப் பெருந்தகை பேட்டி