முதலமைச்சர் அரசியல் நாகரிகம் கருதி விஜயைக் கைது செய்யவில்லை..! சபாநாயகர் அப்பாவு பேட்டி

Published : Nov 06, 2025, 04:00 PM IST

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, "முதலமைச்சர் குறுகிய மனப்பான்மையுடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்" என நடிகர் விஜய் விமர்சித்தது குறித்துக் கேட்டபோது, சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: "யாருடைய மனப்பான்மை குறுகியது என்பதை நாடே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. 41 பேர் இறந்த துயரச் சம்பவத்தில், ஒரு நிமிடம் கூட நிற்காமல் சென்னைக்குத் திரும்பி தன் இல்லத்தில் அமர்ந்துகொண்டாரா அல்லது இரவு முழுவதும் தூங்காமல் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, இறந்தவர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கி, உலகமே பாராட்டும் அளவுக்குச் செயல்பட்டாரா எங்கள் முதலமைச்சர்? கொடூரமான எண்ணம் இருந்திருந்தால், அந்த 41 பேர் இறப்புக்குக் காரணமானவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். ஆனால், 'எந்தத் தலைவரும் தன் தொண்டர்களைக் கொலை செய்ய நினைக்க மாட்டார்கள்' என்று எவ்வளவு பெருந்தன்மையுடன் முதலமைச்சர் கூறியுள்ளார். இதைச் சிறுமைப்படுத்துபவர்கள் சிறுமைப்பட்டுப் போவார்கள்," என்றார். மேலும், "தைரியம் இருந்தால் விஜயைக் கைது செய்திருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அப்படிச் செய்திருந்தால், 2026-ல் அவருக்காக ஒரு புரட்சியே வெடித்திருக்கும். முதலமைச்சர் அரசியல் நாகரிகம் கருதி அவ்வாறு செய்யவில்லை," என்றும் குறிப்பிட்டார்

03:06தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
03:09Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.! 'அல்டிமேட்' ஐந்து காரணங்கள் இதுதான்!
04:04"பாஜக தலைவராக அண்ணாமலை சிறப்பாகச் செயல்பட்டார்" - பாராட்டிய திருமாவளவன்!
08:34முதலமைச்சர் விஜய் கொடுத்த 436 திட்டங்கள்" – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!
08:19மதுரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
03:35TVK vs DMK | புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! சென்னையில் அரங்கேறும் ‘ஈகோ’ யுத்தம்!
05:30மத நல்லிணக்கம் போற்றுவோம்: காயிதே மில்லத் நினைவிடத்தில் தமிழக முதல்வர் விஜய்!
05:08அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு மற்றும் டிஜிட்டல் வசதிகள் துவக்கம்.
04:01எங்கள் சின்னத்தில் போட்டியிடவே விருப்பம்; ஏன் முடியவில்லை? துரை வைகோ பதில்!
02:09தமிழக புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் பொறுப்பேற்பு! | Mahesh Kumar Aggarwal IPS