தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலநிலை நிலவுவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாகக் கூறுவது ஒரு மாயையே என்றும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரத்யேக வாகனம் தயாராகிவிட்டதாகவும், தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.