Parandur Airport : பரந்தூர் விமானநிலைய நிலம் கையகப்படுத்தலில் ஊழலா? - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!

Parandur Airport : பரந்தூர் விமானநிலைய நிலம் கையகப்படுத்தலில் ஊழலா? - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!

Published : Aug 22, 2022, 09:43 AM IST

பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் முறைகேடாக நிலப்பதிவு செய்து தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
 

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூரில் 4,791 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்க உள்ளது.

இந்தநிலையில், பரந்தூரில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் வகையில் 73 ஏக்கர் நிலம், ஏக்கர் அளவீட்டுக்குப் பதிலாக, சதுர அடியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், பரந்தூர் கிராமத்தில் ஒரு ஏக்கருக்கு வழிகாட்டி மதிப்பு ரூ. 8.71 லட்சம், ஆனால் 43,560 சதுர அடி கணக்கில் வழிகாட்டி மதிப்பு ரூ.65.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நிலம் கையப்படுத்தும் நேரத்தில் கருவூலத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். அதாவது அரசு 73 ஏக்கருக்கு இழப்பீடாக ரூ.191 கோடி செலுத்த வேண்டும் என அந்த புகார் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

02:26சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணிக்கு 210 இடங்கள் கன்ஃபார்ம்.. ஆளும் திமுகவை அலறவிடும் இபிஎஸ்
03:29மழைநீர் வடிகாலில் கொசுவலை போடப்பட்டது சர்ச்சையான நிலையில் மேயர் பிரியா விளக்கம்
03:28விஜய் அ.தி.மு.க தலைமையிலான NDA கூட்டணியில் இணைந்து பவன் கல்யாண் மாதிரி வரணும் - நடிகை கஸ்தூரி
03:18அண்ணா பேருந்து நிலையம் முன்பு த.வெ.கவினர் "விசில்" சின்னத்தை பொது மக்களுக்கு வழங்கி கொண்டாட்டம் !
04:20அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை எங்கள் எல்லோருக்கும் உள்ளது! எம்.பி. கனிமொழி பேட்டி
02:01தற்போது கிடைத்திருக்கும் விசில் சின்னம்தான் வெற்றி சின்னம் ! தவெக பொதுச் செயலாளர் புசிஆனந்த் பேட்டி
01:292026 திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச தொகுதிகள் பட்டியல்.!
03:34கேட்டதையெல்லாம் தரும் திருத்துறைப்பூண்டி வைராக்கிய ஆஞ்சநேயர்! இனி சந்தோஷமும் நிம்மதியும் உங்களுக்கே
06:29ஆளுநரும், திமுகவும் சேர்ந்துபேசி வச்சிக்கிட்டு இத பண்றாங்களோனு சந்தேகம் வருது - அருண்ராஜ்
05:39இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர்.. திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது