Parandur Airport : பரந்தூர் விமானநிலைய நிலம் கையகப்படுத்தலில் ஊழலா? - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!

Parandur Airport : பரந்தூர் விமானநிலைய நிலம் கையகப்படுத்தலில் ஊழலா? - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!

Published : Aug 22, 2022, 09:43 AM IST

பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் முறைகேடாக நிலப்பதிவு செய்து தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
 

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூரில் 4,791 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்க உள்ளது.

இந்தநிலையில், பரந்தூரில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் வகையில் 73 ஏக்கர் நிலம், ஏக்கர் அளவீட்டுக்குப் பதிலாக, சதுர அடியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், பரந்தூர் கிராமத்தில் ஒரு ஏக்கருக்கு வழிகாட்டி மதிப்பு ரூ. 8.71 லட்சம், ஆனால் 43,560 சதுர அடி கணக்கில் வழிகாட்டி மதிப்பு ரூ.65.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நிலம் கையப்படுத்தும் நேரத்தில் கருவூலத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். அதாவது அரசு 73 ஏக்கருக்கு இழப்பீடாக ரூ.191 கோடி செலுத்த வேண்டும் என அந்த புகார் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

10:32என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்தார்கள்! – தொல். திருமாவளவன் அதிரடி பேட்டி!
07:41திருச்செந்தூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்: மத்திய அமைச்சர் எல். முருகன் அதிரடி ஆய்வு!
07:18போலியோ இல்லாத தமிழகமே இலக்கு!–மதுரையில் சொட்டு மருந்து வழங்கி அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி!
07:38குழந்தைகளின் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய முதல்வர் விஜய்..! சென்னையில் தேசிய போலியோ முகாம் துவக்கம்!
02:57இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?