ஏமன் நாட்டில் செவிலியராக வேலைக்குச் சென்ற நிமிஷா பிரியா கடந்த 7 ஆண்டுகளாகவே கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரை காப்பாற்றப் பல்வேறு பேச்சுவார்த்தைகள் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், இப்போது அவருக்கு அடுத்த வாரம், அதாவது ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. நிமிஷா பிரியா எதற்காக ஏமன் சென்றார்.. அங்கு அவருக்கு என்ன நடந்தது.. அதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.