Watch : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆடு சந்தை! - ரூ.1 கோடிக்கும் மேல் விற்பனை!

Watch : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆடு சந்தை! - ரூ.1 கோடிக்கும் மேல் விற்பனை!

Published : Jul 06, 2022, 12:14 PM IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மணப்பாறை ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியது. சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையானது.
 

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மாட்டுச் சந்தை மிகவும் சிறப்பு பெற்றதாகும். இச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை ஆட்டுச்சந்தையும் நடைபெறும். இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். திடகாத்திரமான ஆடுகள் விற்பனைக்கு வரும் என்பதாலும் விலையும் கணிசமாக இருக்கும் என்பதாலும் பெரும்பாலான வியாபாரிகள் மணப்பாறை ஆட்டுச்சந்தையில் ஆடுவாங்க விரும்புவார்கள்.

வழக்கமாக இருக்கும் விற்பனையை விட தீபாவளி, கோவில் திருவிழா காலங்கள் மற்றும் பக்ரீத், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆடுகளின் விற்பனையும் அதிகம் இருக்கும் என்பதுடன் விலையும் சற்று உயர்ந்தே இருக்கும். இந்நிலையில் தற்போது கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள் வாங்குவார்கள் என்பதால் இன்று நடந்த ஆட்டுச் சந்தைக்கு அதிக அளவில் ஆடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

நாட்டு ஆடுகள், கொடிஆடு, குரும்பை ஆடு, மேச்சேரிஆடு போன்ற வகை ஆடுகளும் ஆந்திராவில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதே போல் ஆடு வாங்கவும் அதிக அளவிலானோர் வந்திருந்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை என்பதால் குர்பானி கொடுக்க திடகாத்திரமான ஆடுகளை தேர்வு செய்து போட்டிபோட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

ஆடுகள் சுமார் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விலைபோனது. சாதாரண நாட்களை விட இன்று ஒரு ஆடு 4 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை அதிகம் விலை போனது என்றாலும் பலரும் தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிச் சென்றனர். சுமார் 4 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற சந்தையில் ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் ஆடு விற்பனை மூலம் வர்த்தகம் நடைபெற்றது. ஆடுகளை வாங்க வந்தவர்களுக்கு அதிக விலை என்றாலும் விற்க வந்தவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.
 

03:22விசில் கோலமிட சொன்ன தளபதி.! செய்வோம் என முழக்கமிட்ட சிங்கப்பெண்கள்.!
03:33அதிமுக, திமுக இரண்டும் ஊழல் கூட்டம்.! அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகள் இரண்டும் ஒன்றுதான்.!
03:46மக்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தளபதி விஜய்.! உழவனுக்கு முதல் மரியாதை செய்த தளபதி.!
03:44உரிமை காக்க கருப்புக் கொடி....மசோதா நகலை எரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் !
03:06யார் இந்த சவுக்கு சங்கர்? இவருக்கும் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் என்ன உறவு தெரியுமா?
04:00எடப்பாடி பழனிசாமி பாஜகவின் முரட்டு அடிமை ! கருப்புச் சட்டையில் அதிரடி காட்டிய உதயநிதி ஸ்டாலின் !
03:20அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு... தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து திமுகவினர் போராட்டம்!
02:34கரூரில் கருப்புக்கொடி போராட்டம்! செந்தில் பாலாஜி தலைமையில் கூடிய திமுக தொண்டர்கள்.!
03:16சென்னையில் மாஸ் பிரச்சாரம்! நீலாங்கரை இல்லம் திரும்பிய தவெக தலைவர் Vijay
04:47தமிழகத்தில் ஒரு பொய்யான போரை உருவாக்குகிறார் முதல்வர் ஸ்டாலின் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி