மூன்று நாள் தொடர் விடுமுறை.. மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் - இந்த லீவு எதற்காக தெரியுமா?

Ansgar R |  
Published : Sep 10, 2024, 11:49 PM IST

School Leave for 3 Days : இமானுவேல் சேகரன் நினைவுநாளையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருடம் தோறும் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வானது குருபூஜையாக கொண்டாடப்படும் நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்களும், முக்கிய அரசியல் தலைவர்களும் ராமநாதபுரம் செல்வது வழக்கம். 

இந்நிலையில் இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் அதிக அளவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் குவிக்கப்படுவார்கள். அப்படி ராமநாதபுரத்திற்கு வரும் போலீசார் அனைவரும், அங்குள்ள பள்ளிகளில் தான் தங்க வைக்கப்படுவார்கள். குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் போலீசார் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கி இருக்கும் சுமார் 82 பள்ளிகளுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் நாளை செப்டம்பர் 11ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த 82 பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விடுமுறை பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

02:51Magalir urimai thogai: ஜூன் மாத மகளிர் உரிமைத் தொகை.! உங்களுக்கு கிடைக்குமா? உடனே செக் பண்ணுங்க!
02:12அண்ணாமலையின் அரசியல் இயக்கத்தில் இணையும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மருமகன்? அரசியலில் அதிரடி திருப்பம்
09:06இனி பெண்களுக்கு பயமில்லை! களமிறங்கிய "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை"!
01:49"நம் நட்பு ஆத்மார்த்தமானது" – நண்பன் பாரதிராஜாவை இழந்து தவிக்கும் இளையராஜா!
01:32பாரஜிராஜா காலமானார் : முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி !
08:40"சிங்கப்பெண் அதிரடிப்படை என் மனதில் இருந்து வந்தது!" - CM விஜய் அதிரடி பேச்சு!
05:20மாரிதாஸை கொத்தாக தூக்கிய சைபர் கிரைம்! 😱 நடந்தது என்ன? | Youtuber Maridhas Arrest
09:10அரசு அலுவலக அலைச்சலுக்கு விடை: மக்கள் நலனில் முத்திரை பதிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்!
08:19ஆதவ் அர்ஜுனா உறவினர்கள் மீது போதைப்பொருள் புகார்: கோவையில் கிருஷ்ணசாமி பிரஸ்மீட்!
02:36யூடர்ன் அடித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! இணையபோகும் கட்சி தவெகவா? திமுகவா? வெளியான தகவல் !