மூன்று நாள் தொடர் விடுமுறை.. மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் - இந்த லீவு எதற்காக தெரியுமா?

Ansgar R |  
Published : Sep 10, 2024, 11:49 PM IST

School Leave for 3 Days : இமானுவேல் சேகரன் நினைவுநாளையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருடம் தோறும் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வானது குருபூஜையாக கொண்டாடப்படும் நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்களும், முக்கிய அரசியல் தலைவர்களும் ராமநாதபுரம் செல்வது வழக்கம். 

இந்நிலையில் இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் அதிக அளவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் குவிக்கப்படுவார்கள். அப்படி ராமநாதபுரத்திற்கு வரும் போலீசார் அனைவரும், அங்குள்ள பள்ளிகளில் தான் தங்க வைக்கப்படுவார்கள். குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் போலீசார் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கி இருக்கும் சுமார் 82 பள்ளிகளுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் நாளை செப்டம்பர் 11ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த 82 பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விடுமுறை பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி