மூன்று நாள் தொடர் விடுமுறை.. மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் - இந்த லீவு எதற்காக தெரியுமா?

Ansgar R |  
Published : Sep 10, 2024, 11:49 PM IST

School Leave for 3 Days : இமானுவேல் சேகரன் நினைவுநாளையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருடம் தோறும் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வானது குருபூஜையாக கொண்டாடப்படும் நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்களும், முக்கிய அரசியல் தலைவர்களும் ராமநாதபுரம் செல்வது வழக்கம். 

இந்நிலையில் இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் அதிக அளவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் குவிக்கப்படுவார்கள். அப்படி ராமநாதபுரத்திற்கு வரும் போலீசார் அனைவரும், அங்குள்ள பள்ளிகளில் தான் தங்க வைக்கப்படுவார்கள். குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் போலீசார் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கி இருக்கும் சுமார் 82 பள்ளிகளுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் நாளை செப்டம்பர் 11ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த 82 பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விடுமுறை பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

06:15எதிர்க்கட்சியின் குரலை நசுக்கப் பார்க்கிறீர்கள்!" – சட்டப்பேரவையில் எடப்பாடி அதிரடி பேச்சு !
05:19116 நாட்களில் 8 லாக்கப் மரணங்களா? – பேரவையில் ஆளுங்கட்சியை கதறவிட்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
05:46எங்கள் தலைவருக்கு அறிவுரை கூற யாருக்கும் தகுதியில்லை!" – பேரவையில் சீறிய ஆதவ் அர்ஜுனா!
03:31வாக்குறுதிகள் என்ன ஆச்சு? – அரசுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் போர்க்கொடி தூக்கிய பிரேமலதா !
03:54முதல்வர் ஏன் பாஜக குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார் ? சட்டப்பேரவைலயில் உதயநிதி கேள்வி !
06:28ஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு : மதுரையில் தவெக MLA எம்.வி. கருப்பையாவைக் கண்டித்து அதிமுக போராட்டம் !
09:01கச்சத்தீவு போனதற்கு காரணம் திமுக தான் - சபாநாயகரின் கண்டனத்திற்கு ஆளான நிர்மல் குமார் பேச்சு!
06:00தேர்தல் தோல்வி பயமா? - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம் !
04:50சட்டப் புத்தகத்திற்கு எதிராக மனுஸ்மிருதியா? – RSS அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் !
04:01காங்கிரஸ் கட்சியை நம்பவே முடியாது ......லாபம் இருக்க பக்கம் சாய்ந்துவிடும் ! குஷ்பு அதிரடி பேட்டி