மூன்று நாள் தொடர் விடுமுறை.. மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் - இந்த லீவு எதற்காக தெரியுமா?

Ansgar R |  
Published : Sep 10, 2024, 11:49 PM IST

School Leave for 3 Days : இமானுவேல் சேகரன் நினைவுநாளையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருடம் தோறும் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வானது குருபூஜையாக கொண்டாடப்படும் நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்களும், முக்கிய அரசியல் தலைவர்களும் ராமநாதபுரம் செல்வது வழக்கம். 

இந்நிலையில் இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் அதிக அளவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் குவிக்கப்படுவார்கள். அப்படி ராமநாதபுரத்திற்கு வரும் போலீசார் அனைவரும், அங்குள்ள பள்ளிகளில் தான் தங்க வைக்கப்படுவார்கள். குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் போலீசார் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கி இருக்கும் சுமார் 82 பள்ளிகளுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் நாளை செப்டம்பர் 11ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த 82 பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விடுமுறை பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

03:22மேகதாது - காவேரி விவகாரம்: பெங்களூருவில் வாகனங்களை நிறுத்த முயன்ற கன்னட போராட்டக்காரர்கள் கைது!
06:12கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராக கொதித்தெழுந்த விவசாயிகள்! காவிரி நீரைக் காக்க தீவிர போராட்டம்!
02:09த்ரிஷாவை தவறாக பேசுவதா?" – கொதித்தெழுந்த ரசிகர்கள்! மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய கண்டன போஸ்டர்கள்!
02:35கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரண்ட பக்தர்கள் !
01:56பேரவையில் சுவாரஸ்யம்: சபாநாயகர் பாடிய வாழ்த்துப் பாடல்... புன்னகையுடன் முதல்வர் வரவேற்பு!
02:14தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரதம மந்திரி உருவாக்க பட வேண்டும் ! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
09:48இராணுவ சீருடை தரும் கெத்தே தனி ! - இளைஞர்களை அதிர வைத்த அண்ணாமலையின் மாஸ் ஸ்பீச் !
07:56Gen Z இளைஞர்களுக்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் ! - கோவையில் அனல் பறந்த மேடை பேச்சு !
08:40எடப்பாடியை வறுத்தெடுத்த சி.வி. சண்முகம் ! - ஆவேச பேச்சு !
07:31எடப்பாடி பழனிசாமியால் இதுவரை அதிமுகவிற்கு தோல்வி மட்டும் தான் ..! அதிமுக உறுப்பினர் C.V. சண்முகம்