சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டையில் வசித்து வருபவர் வெற்றிவேல் ,த.வெ.க நிர்வாகியான இவர் த.வெ.க திருவள்ளூர் தெற்கு மாவட்ட பூந்தமல்லி முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகன் அப்பு என்பவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் அப்படி நடந்தால் அம்மனுக்கு மண் சோறு சாப்பிடுவதாகவும் கடந்தாண்டு ஆடி 22 ஆம் தேதி வேண்டுதல் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் அடி தடி வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறி த.வெ.க ஒன்றிய செயலாளர் ஜெகன் அப்புவை திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாசம் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் தன் வேண்டுதல் நிறைவேறியதால் ஆடி 22ஆம் தேதி ஆன இன்று பூந்தமல்லியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பனையாத்தம்மன் ஆலயத்தில் வெற்றிவேல் மண் சோறு சாப்பிட்டு நேர்த்தி கடன் நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் "த.வெ.க முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகன் அப்பு என்பவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என அம்மனுக்கு வேண்டுதல் வைத்ததாகவும், வேண்டுதல் நிறைவேறியதால் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும் தெரிவித்தார் . மேலும் தன் குடும்பத்தையே ஜெகன் அப்பு கெடுத்து விட்டதாகவும் கட்சிப் பதவிகளுக்கு பல நிர்வாகிகளிடம் பணம் பெற்று உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.தொடர்ந்து பேசிய வெற்றிவேல் எதிர்காலத்தில் ஜெகன் அப்புவை கட்சியில் சேர்க்க கூடாது என த.வெ.க தலைவர் விஜய் மற்றும் த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர்களுக்கு கோரிக்கை வைத்தார்