மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!

Ansgar R |  
Published : Oct 11, 2024, 04:57 PM IST

Murasoli Selvam : முரசொலி நாளேட்டின் ஆசிரியராக பணியாற்றி வந்த முரசொலி செல்வம் நேற்று அக்டோபர் 10ம் தேதி காலமானார்.

கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்த முரசொலி செல்வம் நேற்று அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அதிகாலை காலமானார். பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. இந்த நிலையில் நேற்று மதியமே அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் முரசொலி செல்வத்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

தேமுதிக தலைவர் பிரேமலதாவும் நேரில் வந்து மறைந்த முரசொலி செல்வத்தின் மனைவிக்கு ஆறுதல் கூறினார். அதேபோல தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயின் மனைவி சங்கீதாவும் நேற்று நேரில் வந்து முரசொலி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை துறை பிரபலங்களும் மறைந்து முரசொலி செல்வத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் தற்போது அவருடைய இறுதி ஊர்வலமானது தொடங்கி இருக்கிறது.

02:322 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்! - ராமநாதபுரத்தில் அலைமோதிய கூட்டம்
04:15'தம்பி விஜய்' பாசமா? அல்லது பயமா? விஜய்யின் பேச்சுக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
06:02கலைப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டிய அமைச்சர் ராஜமோகன்!
03:59சென்னையில் தவெக கூட்டணிக் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு ! அரசியலில் அதிரடி திருப்பம் !
03:27கூட்டணித் தலைவராக வெற்றித் தலைவர் ஒருமனதாகத் தேர்வு: தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு!
03:04சென்னை: முதல்வர் வரலாற்று சாதனை படைத்துள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!
05:25ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் அருண்ராஜ் !
10:16சமூக நீதியை உயர்த்தும் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியத்துவமும் ! சி.வி. சண்முகம் பேச்சு
10:42தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!
03:14வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
Read more