மாசி பிரதோஷம் மகாசிவராத்திரியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாசி பிரதோஷம், மகாசிவராத்திரி,அமாவாசையையொட்டி பல ஊர்களிலிருந்து பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர்.வனத்துறை கேட் திறந்ததும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.