நெல்லை இருட்டுக் கடை அல்வா வாங்கி ருசித்து சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்

Published : Feb 07, 2025, 02:20 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் திருநெல்வேலி பயணத்தின் போது பிரபல இருட்டுக் கடையில் அல்வா ருசித்து, கடை உரிமையாளரிடம் அதன் பெயர்க் காரணம் குறித்து கேட்டறிந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக திட்டப்பணிகள் நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில்  திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுபயணமாக பிப்ரவரி 6, 7 ஆகிய இரண்டு நாள் வந்துள்ளார். நேற்று பல்வேறு  திட்டப்பணிகளை தொடங்கி வைத்தவர், மாலை நேரத்தில் நெல்லை டவுண் வழியாக பயணம் செய்தார்.

அப்பொழுது நெல்லையில் உள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடையை பார்த்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் காரில் இறங்கி கடைக்கு சென்று அல்வா வாங்கி ருசித்தார். இதனையடுத்து அல்வா ருசியாக இருப்பதாக பாராட்டிய முதலமைச்சர் இருட்டைக்கடை என பெயர் வர காரணம் என்ன என கடை உரிமையாளரிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த கடை உரிமையாளர் முன்பு லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் அல்வா கடை நடத்தி வந்ததாகவும். இதன் காரணமாகவே இருட்டுக்கடை அல்வா என பெயர் பெற்றதாகவும் அல்வா கடை உரிமையாளர் பதில் அளித்தார். இதனையடுத்து இன்று நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார் .

03:20நீட் தேர்வை உடனே ரத்து செய் ! – திருச்சியில் கொந்தளித்த DYFI...வீதியை மறித்த போராட்டக்காரர்கள் கைது!
06:22அடக்குமுறையால் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது ! CPI வீரபாண்டியன் அதிரடி பேட்டி
08:45மத்திய அரசே மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாதே! களத்தில் இறங்கிய CPI வீரபாண்டியன் எச்சரிக்கை!
01:27பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
03:0713 மணி நேர அராஜக விசாரணை... கொதித்தெழுந்த எம்.எல்.ஏ-வின் மகன்! ஆளுங்கட்சியின் பழிவாங்கல் அம்பலம்!
04:48சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம்! CPI அலுவலகத்தை முற்றுகையிட்ட CJP தொண்டர்கள்
07:29ஒரு எக்ஸாமை ஒழுங்கா நடத்தத் துப்பில்லை! — நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார்
02:14போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள் ! விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது !
06:59நாங்கதான் உண்மையான அதிமுக ! - எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்த சண்முகம் தரப்பு !
06:58கீழடியில் திடீர் ஆய்வு.....பார்வையிட்ட பின் தொல்லியல் துறைக்கு அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் ராஜ்மோகன்!