நெல்லை இருட்டுக் கடை அல்வா வாங்கி ருசித்து சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்

Published : Feb 07, 2025, 02:20 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் திருநெல்வேலி பயணத்தின் போது பிரபல இருட்டுக் கடையில் அல்வா ருசித்து, கடை உரிமையாளரிடம் அதன் பெயர்க் காரணம் குறித்து கேட்டறிந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக திட்டப்பணிகள் நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில்  திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுபயணமாக பிப்ரவரி 6, 7 ஆகிய இரண்டு நாள் வந்துள்ளார். நேற்று பல்வேறு  திட்டப்பணிகளை தொடங்கி வைத்தவர், மாலை நேரத்தில் நெல்லை டவுண் வழியாக பயணம் செய்தார்.

அப்பொழுது நெல்லையில் உள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடையை பார்த்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் காரில் இறங்கி கடைக்கு சென்று அல்வா வாங்கி ருசித்தார். இதனையடுத்து அல்வா ருசியாக இருப்பதாக பாராட்டிய முதலமைச்சர் இருட்டைக்கடை என பெயர் வர காரணம் என்ன என கடை உரிமையாளரிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த கடை உரிமையாளர் முன்பு லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் அல்வா கடை நடத்தி வந்ததாகவும். இதன் காரணமாகவே இருட்டுக்கடை அல்வா என பெயர் பெற்றதாகவும் அல்வா கடை உரிமையாளர் பதில் அளித்தார். இதனையடுத்து இன்று நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார் .

05:52தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.. பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை
02:25ஜெயிப்போமா? மாட்டோமான்னு நீங்கதான் சொல்லனும்.. பிடி கொடுக்காமல் நழுவிச்சென்ற கமல்ஹாசன்
03:05தனித்து நின்றால் விஜய்க்கு 80 சீட் உறுதி! அடித்துச் சொல்லும் ரிப்போர்ட்! கதி கலங்கும் கோட்டை!
04:18தனித்து நிற்கிறோம்... தனித்துவத்தோடு நிற்கிறோம்! – களத்தில் கர்ஜிக்கும் சீமான்.
03:46கூட்டணிக்கு 'எண்ட் கார்டு'.! தனித்து வேட்டை ஆடத் தயாராகும் தவெக!
03:18Voter ID இல்லையா? கவலையே வேண்டாம்..! அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்..! எப்படி தெரியுமா..?
04:24தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. தவெக தலைவர் விஜய் பங்ககேற்று இப்தார் நோன்பு திறந்தார்.
03:57"கடைகோடி மக்களுக்கும் நல்லது செஞ்சிருக்கோம்" செய்ததை எடுத்துச்சொன்ன அமைச்சர் கீதாஜீவன்
02:33அண்ணா அறிவாலயத்தில் ஓ.பி.எஸ்! உற்சாகமாக வரவேற்ற திமுக தொண்டர்கள்.!
03:26விஜய் நிச்சயமாக வாக்குகளை பிரிப்பார்...ஆனால் மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்! புகழேந்தி பேட்டி