நெல்லை இருட்டுக் கடை அல்வா வாங்கி ருசித்து சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்

Published : Feb 07, 2025, 02:20 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் திருநெல்வேலி பயணத்தின் போது பிரபல இருட்டுக் கடையில் அல்வா ருசித்து, கடை உரிமையாளரிடம் அதன் பெயர்க் காரணம் குறித்து கேட்டறிந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக திட்டப்பணிகள் நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில்  திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுபயணமாக பிப்ரவரி 6, 7 ஆகிய இரண்டு நாள் வந்துள்ளார். நேற்று பல்வேறு  திட்டப்பணிகளை தொடங்கி வைத்தவர், மாலை நேரத்தில் நெல்லை டவுண் வழியாக பயணம் செய்தார்.

அப்பொழுது நெல்லையில் உள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடையை பார்த்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் காரில் இறங்கி கடைக்கு சென்று அல்வா வாங்கி ருசித்தார். இதனையடுத்து அல்வா ருசியாக இருப்பதாக பாராட்டிய முதலமைச்சர் இருட்டைக்கடை என பெயர் வர காரணம் என்ன என கடை உரிமையாளரிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த கடை உரிமையாளர் முன்பு லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் அல்வா கடை நடத்தி வந்ததாகவும். இதன் காரணமாகவே இருட்டுக்கடை அல்வா என பெயர் பெற்றதாகவும் அல்வா கடை உரிமையாளர் பதில் அளித்தார். இதனையடுத்து இன்று நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார் .

03:05விசில் போடு மாமே! சிஎஸ்கே ரசிகரைத் தூக்கிக் கொண்டாடிய விஜய் - மெர்சலான ரசிகர்கள்.
03:53முதல்வர் ஸ்டாலினை தோல்வி சுனாமி சுத்தி சுத்தி வருகிறது ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:09சாலையின் இரண்டு புறமும் திரண்ட பெண்கள்.! விஜய்யை காண திரண்ட இளசுகள்.!
03:29எமோஷனலான எலெக்சனை இந்தியாவே பாத்திருக்காது.. நெல்லையில் விஜய் பிரச்சாரம்
04:41திமுகவின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து நிக்குது.! நம்ம மேல காண்டு.! மாஸ் காட்சிய தளபதி விஜய்
04:54ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போனதுக்கு அப்புறம் தான் கட்சியையே நான் தொடங்கிருக்கேன் - தவெக தலைவர் விஜய்
03:09டீக்கடை, மார்க்கெட் என எல்லா இடத்திலேயும் வாக்கு சேகரிப்பு! மக்களோடு மக்களாக டீ குடித்த முதலமைச்சர்
03:15ஓட்டு வேட்டைக்கு புறப்பட்ட தளபதி.! காத்திருந்து கையசைக்கும் தாய்குலங்கள்.!
02:58சென்னையில் இடி, மின்னலுடன் விடாமல் மழை ஊத்தப்போகுது.. வானிலை மையம் அப்டேட்
03:40நாளை திருநெல்வேலிக்கு மக்களை சந்திப்பதற்கு தலைவர் விஜய் வருகிறார் ! புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு